மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கம் தோல்வி – ரணில் அதிருப்தி
மக்களின் அமைதிப்போராட்டங்கள் வன்முறையாக உருவெடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு செவி சாய்த்து அவற்றுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் அரசாங்கம் தோல்வியை சந்தித்துள்ளதாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளாா்.
இதுதொடர்பில் விளக்கமளிக்கு அவர் வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளாா். இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. எதிர்க் கட்சியும் தேல்வியை சந்தித்துள்ளது.
அமைதிப் போராட்டங்களில் எந்தவொரு நபருக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது. அதேபோன்று வன்முறைக்கும் இடமளிக்க கூடாது. மக்களின் போராட்டங்களில் அரசியல் கட்சிகள் பங்குப்பற்றகூடாது.
காலம் கைமீறி போயிருந்தாலும் தற்போது நாடாளுமன்றத்துக்கும் பொறுப்பு இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இதுதொடர்பில் பேசப்பட வேண்டும்.
எமது பிரச்சினைகளை வன்முறைகளின்றி நாமே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.
Post a Comment