( மினுவாங்கொடை நிருபர் )
பல்கலைக் கழகங்களில் கலைப் பிரிவில் கற்கும் மாணவர்களுக்காக தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஆங்கிலப் பாட நெறிகளைக் கற்பிப்பதற்கான விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இதனடிப்படையில், ஒவ்வொரு கலைப் பீடத்திலும் தகவல் தொழில் நுட்பப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்படுமென, பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே தெரிவித்துள்ளார்.
மேலும், கலைப் பீடங்களில் அனைத்து மாணவர்களுக்கும் கற்பிக்கக் கூடிய வகையில், கணினி ஆய்வு கூடங்கள் அமைக்கப்படும்.
அத்துடன், பல்கலைக் கழகங்களிலிருந்து மாணவர்கள் வௌியேறிய பின்னர், அவர்களின் தகவல் தொழில் நுட்பத்துறை தொடர்பிலான அறிவு குறித்து சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இதனிடையே, இம்முறை பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு, கணினி மற்றும் ஆங்கிலப் பாடநெறி கற்கைகளை, அடுத்த மாதம் முதல் ஒன்லைன் மூலம் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடநெறிகளை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு, வேறாக சான்றிதழ்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
( ஐ. ஏ. காதிர் கான் )
Post a Comment