அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
பாறுக் ஷிஹான் ஒரு சில உறுப்பினர்கள் மேற்கொண்ட முகவரி அற்ற கடிதத்தினால் கடந்த மாத கூட்டம் செல்லுபடி அற்றதாக மாற்றப்படுமானால் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டு செல்வார்களானால் எமது சபை நடவடிக்கைகள் முன்னகர்த்த முடியாமல் போகும் என நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர் ரியாஸ் ஆதம் தனது கருத்தினை முன்வைத்தார். நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த கூட்ட அமர்வு வியாழக்கிழமை (25) பிரதேச சபையின் பதில் தவிசாளர் வை.எல்.சுலைமாலெவ்வை தலைமையில் 11 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது சென்ற மாத கூட்டறிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் என உள்ளூராட்சி ஆணையாளருக்கு முகவரி அற்ற கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது . இதனை தொடர்நது சென்ற மாத கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களையும் ரத்து செய்யக்கோரி உள்ளூராட்சி திணைக்களத்தினால் நிந்தவூர் பிரதேச சபைக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒரு சில உறுப்பினர்கள் மேற்கொண்ட முகவரி அற்ற கடிதத்தினால் கடந்த மாத கூட்டம் செல்லுபடி அற்றதாக மாற்றப்படுமானால் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டு செல்வார்களானால் எமது சபை நடவடிக்கைகள் முன்னகர்த்த முடியாமல் போகும் என நிந்தவூ