முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
ஜனாதிபதி கோட்டாபய அரசாங்கத்தினதும் இராணுவம் மற்றும் பொலிசாரினதும் அர்ப்பணிப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்
இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் கடந்த ஆட்சியாளர்களாக இருந்திருந்தால் இன்று நாடு படு மோசமான நிலைக்கு போயிருக்கும். ஆனால் ஜனாதிபதி கோட்டாபய அரசாங்கத்தினதும் இராணுவம் மற்றும் பொலிசாரினதும் அர்ப்பணிப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளதாவது,
இன்று நாடு மிகப்பெரிய தேசிய பாதுகாப்பு பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளது. எந்த இடத்தில் எப்போது கொரோனா தாக்குதல் தொடுக்கும் என்ற அச்சத்தில் நாட்டு மக்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சவால் மிக்க நேரத்தில் எந்தவித பதட்டமும் இன்றி நாட்டின் தலைவர் மிக சிறப்பாக நாட்டை நிர்வகிப்பதை காண்கிறோம். அவருடன் இராணுவமும் பொலிசும் இணைந்து மிகச்சிறந்த முறையில் மக்களை கோரானாவிலிருந்து காப்பாற்ற அர்ப்பணிப்புடன் போராடுவதை காண்கிறோம்.
கடந்த வருடம் இந்த நாடு பாரிய பயங்கரவாதத்தாக்குதலுக்கும் அதன் பின்னர் அப்பாவி முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கும் முகம் கொடுத்தது. பயங்கரவாதிகள் தாக்கப்போகிறார்கள் என்று தெரிந்தும் வாழாவெட்டியாக இருந்த தலைவர்களைத்தான் நாடு கண்டது. அதே போல் இனவாதிகளின் அப்பாவிகள் மீதான தாக்குதலை தடுக்க முடியாமல் ராணுவமும் பொலிசும் புதினம் பார்க்க வைக்கும் தலைவர்களையே கொண்டிருந்தது.
ஆனால் நமது நாட்டில் கொரோனாவுக்கான சமிக்ஞை கிடைத்ததும் அரசாங்கம் திடமான நடவடிக்கைகளை எடுத்தது. முடிந்தளவு அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இச்சிறந்த நடவடிக்கைகளுக்கு பிரதான காரணம் கோட்டாபய ராஜபக்ஷ என்ற சிறந்த, நிர்வாக திறமையுள்ள ஜனாதிபதியாகும்.
Comments
Post a comment