முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
குதிரையில் செல்வதனால் எனக்கு இடுப்பு சுழுக்கு நோய் குணமாகின்றது -குதிரையில் வலம் வரும் முதியவரான சபீர்
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் காலையில் தினமும் தலைக்கவசம் அணிந்து கொண்டு 58 வயதுடைய குறித்த நபர் குதிரை ஒன்றில் வலம் வருகின்றார்.
அவர் குறித்த குதிரையை மருதமுனைவாசி ஒருவரிடம் இருந்து ரூபா 1 அரை இலட்சத்திற்கு கொள்முதல் செய்துள்ளதாகவும் சாதாரணமாக புல் கொடுத்து குதிரையை குளிப்பாட்டி பராமரிப்பதாகவும் தினமும் குதிரையின் பராமரிப்பிற்கு ரூபா 500 செலவாகுவதாகவும் தெரிவிக்கின்றார்.
கடந்த காலங்களில் வேளாண்மை செய்கையில் ஈடுபட்ட இம்முதியவர் இடுப்பு சுழுக்கு நோய் காரணமாக அதை இடைநடுவில் கைவிட்டுள்ளதாக ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.
Comments
Post a comment