முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முழு ஆதரவை ஜனாதிபதி சார்ந்த கட்சிக்கு ஆதரவை வழங்க தீர்மானித்துள்ள நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எம் பிக்கள் செய்துவரும் எதிர்விமர்சனங்கள் தேர்தலில் தாக்கங்களை ஏற்படுத்தலாமென முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் நடத்திய சந்திப்பின்போது இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .நேற்றுமுன்தினமிரவு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
” கடந்த நல்லாட்சியில் ஜனாதிபதி ஒரு கட்சியிலும் பாராளுமன்ற அதிகாரம் ஒரு கட்சியிலும் இருந்தபடியால் ஜனாதிபதியால் எந்த செயற்பாட்டையும் தற்றுணிவுடன் செய்ய முடியாமல் போயிற்று.அதனால் தான் அப்படி எதுவும் எதிர்காலத்தில் நடக்கக் கூடாதென்பதற்காக தற்போதைய ஜனாதிபதி சார்ந்த கட்சிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் பெற்றுக் கொடுக்க சுதந்திரக் கட்சி தீர்மானித்தது.ஏற்கனவே இதற்கான ஒப்பந்தங்களும் செய்யப்பட்டன .ஆனால் பொதுபெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் அரசியல் மேடைகளில் எமது கட்சியை – உறுப்பினர்களை – என்னை பகிரங்க விமர்சனம் செய்துவருகின்றனர்.இவ்வாறான செயற்பாடுகள் அரசியலில் எதிர்காலத்தில் தாக்கங்களை ஏற்படுத்தலாம்.எனவே அப்படியானவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குங்கள்.நாங்களும் பதில் விமர்சனங்களை செய்தால் அது அரசியல் நாகரீகமாக இருக்காது ”
என்றும் இந்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரி ஜனாதிபதி கோட்டாபயவிடம் எடுத்துக்கூறினார் என்று அறியமுடிந்தது.
இந்த விடயத்தை கட்சியின் உயர்மட்டத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்வதாக ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார் என்று அறியமுடிந்தது.
Comments
Post a comment