சுபரி கம" வேலைத்திட்டம் தொடர்பான ஆலோசனை கலந்துரையாடல்
Posted by aljazeeralanka.com on December 22, 2019 in | Comments : 0
===========
(எம்.என்.எம்.அப்ராஸ்)
"சுபரி கம" சமுதாய அடிப்படையிலான கிராம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ளடக்கிய ஒவ்வொரு பிரதேச செயலக கிராம சேவகர் பிரிவின் கீழ் இரண்டு மில்லியன் ரூபா பெறும தியான செயற் திட்டங்களை முன்னெடுக்கும் வேலைத்திட்டம் தொடர்பாக
கல்முனைகுடி 13மற்றும் 14 பிரிவுக்கான
ஆலோசனை கலந்துரையாடல் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மண்டபத்தில் இன்று(22) இடம்பெற்றது .
இதன் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி யு.எம்.நிசார் , உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத் ,
கல்முனை மாநகர சபை உறுப்பினர்காளான அப்துல் மனாப் ,ஏ.எம்.பைரூஸ் மற்றும்
அரசியல் விமர்சகர் எம்.எச்.எம்.இப்ராஹீம்,கலீலூர் ரஹ்மான்,
கல்முனை பிரதேச செயலக அதிகாரிகள் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள கிராம அபிவிருத்தி சங்கம் மூலம் இத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது இதன்மூலம்உட்கட்டமைப்பு ,பிரதேசத்தில் காணப்படுகின்ற அத்தியாவசிய தேவைகள் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வது இத் திட்டத்தின் நோக்கமாகும் .
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment