ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
கல்முனை அல் அமீன் பாலர் பாடசாலை வருடாந்த கலை நிகழ்ச்சியும், பரிசளிப்பு விழாவும்.
(கல்முனை ஜவ்சான்)
கல்லூரியின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ஜ.எம். மன்சூர் தலைமையில் இன்று(30) கல்முனை ஸாஹிரா கல்லுரி காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரிஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந் நிகழ்வின் கெளரவ அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் கெளரவ ஏ.எ.எம்.பைருஸ், ஸாஹிரா கல்லுரி அதிபர் ஜாபிர், மற்றும் இலங்கையின் எதிர்கால மாற்றத்துக்கான அமைப்பின் தலைவர் மே.மே.ஏ முபாறக் மற்றும் பல அதிதிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
(கல்முனை ஜவ்சான்)
கல்லூரியின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ஜ.எம். மன்சூர் தலைமையில் இன்று(30) கல்முனை ஸாஹிரா கல்லுரி காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரிஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந் நிகழ்வின் கெளரவ அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் கெளரவ ஏ.எ.எம்.பைருஸ், ஸாஹிரா கல்லுரி அதிபர் ஜாபிர், மற்றும் இலங்கையின் எதிர்கால மாற்றத்துக்கான அமைப்பின் தலைவர் மே.மே.ஏ முபாறக் மற்றும் பல அதிதிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Comments
Post a comment