ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
(எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பின் ஏற்பாட்டில் (Kalmunai Undergraduate Association) கல்முனை பிரதேசத்தில் வசிக்கும் வசதி குறைந்த தெரிவு செய்யப்பட்ட 51 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் கடந்த புதன்,வியாழன் ஆகிய இரு தினங்களில்
(25,26-12-2019)மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கிவைக்கப்பட்டது.
இதற்கான பூரண அனுசரணையும் கல்முனைக்கான வளைகுடா அமைப்பினால் (Gulf Federation for Kalmunai - GFK) வழங்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.இதன் மூலம் பல மாணவர்கள் பயனடைந்ததாக அமைப்பின் தலைவர் ஏ.எம்.எம்.முர்சித்
தெரிவித்தார்.
இதற்கான பூரண அனுசரணையும் கல்முனைக்கான வளைகுடா அமைப்பினால் (Gulf Federation for Kalmunai - GFK) வழங்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.இதன் மூலம் பல மாணவர்கள் பயனடைந்ததாக அமைப்பின் தலைவர் ஏ.எம்.எம்.முர்சித்
தெரிவித்தார்.
Comments
Post a comment