அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாம் எதிர்பார்த்த அளவிற்கு மக்களின் ஆதரவு எமக்கு கிடைக்கவில்லை. ஆனால் பொதுத் தேர்தலில் எம்மை பிரதான எதிர்கட்சியாக மாற்றும் மக்கள் ஆதரவை கேட்கின்றோம் என மக்கள் விடுதலை முன்னணியினர் தெரிவித்துள்ளது.
அத்துடன் இன்று ஐக்கிய தேசிய கட்சிக்குள் நிகழும் அதிகார மோகமும் முரண்பாடுகளும் மக்களுக்கு நன்றாகவே தெரிந்துள்ளது. அவர்கள் ஆட்சியில் இருக்கும் போதும் குற்றவாளிகளை தண்டிக்க எந்த நடவடிக்கையையும் எடுக்காது குற்றவாளிகளை காப்பாற்றும் நடவடிக்கைகளையே முன்னெடுத்தனர்.
ஆகவே அவர்கள் எதிர்கட்சியாக அமர்ந்தாலும் கூட குற்றவாளிகளை காப்பாற்றும் வேலைத்திட்டம் மட்டுமே இடம்பெறும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜெயதிஸ்ஸ இதனைக் கூறினார்.
இம் முறை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ மீது நம்பிக்கை வைத்து 69 இலட்சம் மக்கள் அவரை ஜனாதிபதியாக்கியுள்ளனர். அவர்களுக்காக மட்டும் அல்ல நாட்டில் சகல மக்களுக்காகவும் அவர் தனது கடமைகளை முன்னெடுக்க வேண்டும். அவருடன் இருக்கும் இனவாத, அடிப்படைவாத சக்திகள் கூறுவதை கேட்டு இறுக்கமான ஆட்சியை அவர் கொண்டு செல்லாது அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டினை கட்டியெழுப்ப வேண்டிய வேலைத்திட்டங்களை அவர் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் இதன்போது கூறினார்.
Comments
Post a comment