இனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் ஆபத்து – அரசுக்கு கரு ஜயசூரிய எச்சரிக்கை புதிய அரசமைப்பை உருவாக்கி தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். இனவாதத்தைத் தூண்டி அரசியலை முன்னெடுக்கும் தற்போதைய அரசியல் பயணம் தொடருமாயின் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினைகள் நாட்டினுள் உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய. நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்ற இனவாத அரசியல் கலாசாரம் இலங்கையை நீண்ட காலத்துக்கு நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது. இந்த விடயத்தில் அனைவரும் குறுகிய நோக்கத்தில் பார்க்கின்றனர். ஆனால், தூரநோக்கு சிந்தனையுடன் இந்த நாட்டின் இன – மத உரிமைகளைப் பலப்படுத்தும், பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்தப் புதிய அரசமைப்பில் ஜனநாயகம், மனித உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் பறிக்கப்பட்ட உரிமைகள் முழுமையாக
சமூகத்தின் மீது கொண்ட அதீத அக்கறையினாலேயே சஜித்துக்கு ஆதரவளிக்கின்றோம். கிண்ணியாவில் அமைச்சர் றிஷாட்.
சமூகத்தின் மீது கொண்ட அதீத அக்கறையினாலேயே சஜித்துக்கு ஆதரவளிக்கின்றோம்.
கிண்ணியாவில் அமைச்சர் றிஷாட்.
-ஊடகப்பிரிவு-
முஸ்லிம் தலைமைகள் கொள்கை வேறுபாடு மற்றும் கருத்தியல் ரீதியான இடைவெளிகளை கொண்டுள்ள போதும் சமூகத்தின் பாதுகாப்பையும் எதிர்கால இருப்பையும் கருத்தில்கொண்டே ஓரணியில் செயற்பட்டு சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கிண்ணியாவில் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூபின் ஏற்பாட்டில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து இடம்பெற்ற பொது கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,
சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளை எப்படியாவது கபளீகரம் செய்யவேண்டுமென்று அந்த சமூகத்திற்கு எதிராக கொள்கைகளை கொண்டவர்களும் கடந்த காலங்களில் இந்த மக்களை நெருக்குவார படுத்தியவர்களும் அச்சுறுத்தியவர்களும் கங்கணம் கட்டி நிற்கின்றனர்.இந்த இனவாத கட்சிகளின் ஏஜெண்டுகளும் கொந்தராத்துக் காரர்களும் சிறுபான்மை மக்களின் பிரதேசங்களுக்கு சென்று வீடு வீடாக தெரிகின்றனர்.ஆதரவாக பேசியும் சில சந்தர்ப்பங்களிலும் அச்சுறுத்தல் பாணியிலும் இவர்கள் வாக்கு கேட் கின்றனர்.
ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் என்று அச்சடித்து கொண்ட ஒருவர்,முஸ்லிம் வாக்குகளை எப்படியாவது சிதறடித்து தனக்கு விருப்பமான வேட்பாளரை வெல்லசெய்யவேண்டும் என்று களத்தில் இறங்கியுள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களுக்கு இடையில் தான் போட்டி நிகழ்கின்றது இனவாதிகளுடன் ஒருவர் நிற்கின்றார் பல்வேறு சமூகங்களை பிரநிதித்துவப்படுத்துகின்ற தலைமைகளும் கட்சிகளும் அரசியல்வாதிகளும் அடுத்த வேட்பாளருடன் நிற்கின்றனர்.பத்து வருடங்களாக முஸ்லிம் சமூகத்தின் நிம்மதியை தொலைத்தவர்கள்,நிம்மதியாக வாழவிடாதவர்கள் மார்க்க கடமைகளை சுமுகமாக பின்பற்ற தடையாக இருந்தவர்கள் ஆகியோருடன் இணைந்துள்ள வேட்பாளர்களுக்கு நாம் எப்படி ஆதரவளிக்க முடியும். பணத்தை காட்டி,பதவியை காட்டி,இனிப்பான கதைகளை கூறி இவர்கள் முஸ்லிம் சமூகத்தை பிழையாக வழிநடத்த பார்க்கின்றனர்.
நமது சமூகத்தில் உள்ள புத்தி ஜீவிகள் சிலரும் இவர்களிடம் சோரம்போய் இருப்பதுதான் வேதனையானது சிங்கள பிரதேசங்களில் அப்பட்டமான இனவாதத்தையும்,துவேசத்தையும் விதைப்பவர்கள் சிறுபான்மை மக்கள் வாழும் இடங்களுக்கு வந்து இன ஐக்கியத்தை போதிக்கின்றார்கள் இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
முஸ்லிம் தலைமைகள் கொள்கை வேறுபாடு மற்றும் கருத்தியல் ரீதியான இடைவெளிகளை கொண்டுள்ள போதும் சமூகத்தின் பாதுகாப்பையும் எதிர்கால இருப்பையும் கருத்தில்கொண்டே ஓரணியில் செயற்பட்டு சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கிண்ணியாவில் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூபின் ஏற்பாட்டில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து இடம்பெற்ற பொது கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,
சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளை எப்படியாவது கபளீகரம் செய்யவேண்டுமென்று அந்த சமூகத்திற்கு எதிராக கொள்கைகளை கொண்டவர்களும் கடந்த காலங்களில் இந்த மக்களை நெருக்குவார படுத்தியவர்களும் அச்சுறுத்தியவர்களும் கங்கணம் கட்டி நிற்கின்றனர்.இந்த இனவாத கட்சிகளின் ஏஜெண்டுகளும் கொந்தராத்துக் காரர்களும் சிறுபான்மை மக்களின் பிரதேசங்களுக்கு சென்று வீடு வீடாக தெரிகின்றனர்.ஆதரவாக பேசியும் சில சந்தர்ப்பங்களிலும் அச்சுறுத்தல் பாணியிலும் இவர்கள் வாக்கு கேட் கின்றனர்.
ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் என்று அச்சடித்து கொண்ட ஒருவர்,முஸ்லிம் வாக்குகளை எப்படியாவது சிதறடித்து தனக்கு விருப்பமான வேட்பாளரை வெல்லசெய்யவேண்டும் என்று களத்தில் இறங்கியுள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களுக்கு இடையில் தான் போட்டி நிகழ்கின்றது இனவாதிகளுடன் ஒருவர் நிற்கின்றார் பல்வேறு சமூகங்களை பிரநிதித்துவப்படுத்துகின்ற தலைமைகளும் கட்சிகளும் அரசியல்வாதிகளும் அடுத்த வேட்பாளருடன் நிற்கின்றனர்.பத்து வருடங்களாக முஸ்லிம் சமூகத்தின் நிம்மதியை தொலைத்தவர்கள்,நிம்மதியாக வாழவிடாதவர்கள் மார்க்க கடமைகளை சுமுகமாக பின்பற்ற தடையாக இருந்தவர்கள் ஆகியோருடன் இணைந்துள்ள வேட்பாளர்களுக்கு நாம் எப்படி ஆதரவளிக்க முடியும். பணத்தை காட்டி,பதவியை காட்டி,இனிப்பான கதைகளை கூறி இவர்கள் முஸ்லிம் சமூகத்தை பிழையாக வழிநடத்த பார்க்கின்றனர்.
நமது சமூகத்தில் உள்ள புத்தி ஜீவிகள் சிலரும் இவர்களிடம் சோரம்போய் இருப்பதுதான் வேதனையானது சிங்கள பிரதேசங்களில் அப்பட்டமான இனவாதத்தையும்,துவேசத்தையும் விதைப்பவர்கள் சிறுபான்மை மக்கள் வாழும் இடங்களுக்கு வந்து இன ஐக்கியத்தை போதிக்கின்றார்கள் இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Comments
Post a comment