எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
சீரற்ற காலநிலை காரணமாக அக்குறணை நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அக்குறணை நகர் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் அண்மைய நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக நகரை அண்மித்து ஓடும் பிங்கா ஓயா மீண்டும் பெருக்கெடுத்து வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் நகர வர்த்தகர்கள் பெரும் அச்சத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
அக்குறணை நகர வியாபாரிகள் மாதாந்த வாடகை அடிப்படையிலேயே கடைகளை பெற்று வியாபாரம் செய்து வருகின்றனர்.
இத்தகையதொரு சூழ்நிலையில் வருடாந்தம் வெள்ளப்பெருக்கு காரணமாக பொருட்கள் சேதமடைவதனால் பாரிய நட்டத்திற்கு முகம்கொடுத்துவருகின்றனர். இதனால் மாதாந்த வாடகையை கூட தமக்கு செலுத்தமுடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
அடிக்கடி வெள்ளத்தில் மூழ்குவதன் காரணமாக அக்குறணை நகர் ஊடாக செல்லும் கண்டி - யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைகின்றது.
இதனால் பிரதேசவாசிகள், பயணிகள் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். அக்குறணை ஸியா மாவட்ட வைத்தியசாலையும் அக்குறணை நகரிற்கு அருகே அமைந்துள்ளமையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில் நோயாளிகள் வைத்தியசாலைக்கு சென்றுவருவதிலும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.
ஆகவே புதிய அரசாங்கத்திலேனும் அக்குறணை நகரில் வெள்ளப்பெருக்கு அனர்த்தம் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிரந்தர தீர்வொன்றை பெற்றுத் தருமாறு நகர வர்த்தகர்கள் உட்பட பிரதேசவாசிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
- newsview
Comments
Post a comment