ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளி முன்பாக பிரதான வீதியில் இளைஞர்களால்
ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.
அண்மையில் சாய்ந்தமருதில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திற்காக சாய்ந்தமருக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் வந்ததை அடுத்து, பாதுகாப்பு கடமையில் இராணுவம் மற்றும் கல்முனை பொலிசார் இருந்த நிலையில் அவர்களுக்கு
முன்னிலையில் வீதியில் நின்ற சிறுவர்கள் மற்றும் பொது மக்களுக்கு கட்சி ஆதரவாளர்கள் பலர் கடந்த வெள்ளிக்கிழமை 01-11-2019 தாக்கினர்.
இது சம்மந்தமாக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தும் இது வரையும் பொலிஸ் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்களை கைது செய்யவும் இல்லை. இதனை கண்டித்து அவர்களின் கைதை வலியுறுத்தியும் சாய்தமருது பொது மக்கள், இளைஞர்களால் இன்று (03) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று சாய்ந்தமருதில் நடாத்தப்பட்டது.
இங்கு குழுமியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு சுலோகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.
அதில் "பொலிசாரே குண்டர்களிடமிருந்து பொது மக்களை காப்பாற்று, பொலிஸ் மா அதிபரே சட்டம் பொலிசாரின் கையிலா குண்டர்களிடமா? போன்ற பல்வேறு சுலோகங்களை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வீதிப் போக்குவரத்தும் சிறிது நேரம் ஸ்தம்பிதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
- எஸ். அஷ்ரப்கான்
- எஸ். அஷ்ரப்கான்
Comments
Post a comment