ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
தமிழ் மொழி பெயர் பலகைகளை சேதமாக்கியவர்களை உடனடியாக கைது செய்யுமாறு மகிந்த ராஜபக்ச பொலிசாருக்கு உத்தரவு.
கடந்த வாரம் முதல் இலங்கையின் சில பிரதேசங்களில், குறிப்பாக
பானதுறை, கெறவளபிட்டிய பிரதேசங்களில் உள்ள வீதிப் பெயர் பலகைகளில் காணப்பட்ட தமிழ் மொழி சொற்களை இனந்தெரியாத நபர்கள் அழிததும், சேதம் செய்தும் இருந்தது அறிந்ததே..
இந்நிலையில் இது தொடர்பில் போலீசாரிடம் மற்றும் அதிகாரிகளி டம் முறைபாடுகளும் செய்யப் பட்டும், சமூக வலைகளில் பகிரப்பட்டும் வந்தது.
இதனை அடுத்து இன்று மாலை ,
தமிழ் மொழியிலான பெயர் பலகை களை நாசம் செய்தவர்களை உடனடியாக கைது செய்யு மாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் சேதமாக்கப் பட்ட பெயர் பலகைகளை உடன் மாற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கட்டளையும் பிறப்பித்துள்ளார்.
Comments
Post a comment