ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவினூடாக அவர் வாழ்த்துக் கூறியுள்ளார்.
இலங்கையுடன் மிக நெருக்கமாக இணைந்து செயற்பட தாம் எதிர்பார்ப்பதாகவும் பாரத பிரதமர் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனூடாக எதிர்காலத்தில் வலுவான பிணைப்பை கட்டியெழுப்ப எதிர்பார்ப்பதாகவும் பாரத பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a comment