முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
கொழும்பிலுள்ள பிரபல உணவகம் ஒன்றில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில் உணவு பரிமாறப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதிய நேர உணவுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட சோற்றுப் பொதியில் நத்தை இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உணவுகளை விநியோகிக்கும் நடமாடும் சேவையாக ஊபர் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட உணவுப்பொதியிலேயே நத்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 7 இல் உள்ள பிரபல உணவகத்தில் இருந்து பெற்றுக்கொள்பட்ட உணவு பொதியில் நத்தை இருந்தமை தொடர்பில், பாதிக்கப்பட்டவர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.
உணவின் ஒரு பகுதியை உட்கொண்ட பின்னரே நத்தை இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மிகவும் அருவருப்பான அனுபவமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர், சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார். இதன்போது உணவகத்தின் களஞ்சியத்திலிருந்து அரிசி பொதியில் நத்தைகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a comment