ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
உலகில் செயற்படாமல் சம்பளம் எடுக்கும் ஒரே பதவி பாராளுமன்ற உறுப்பினர் பதவிதான் என தேசிய மக்கள் சக்தி அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மூன்று மாதத்துக்கு ஒரு முறை பாராளுமன்றத்துக்குச் சென்றால், வருடத்துக்கு நான்கு நாட்கள் என ஐந்து வருடத்துக்கும் 20 நாட்கள் பாராளுமன்றம் சென்று வந்தால் போதுமானது என்றும் அத்தகையோருக்கு ஓய்வூதியமும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்கவே நாம் அரசாங்கம் அமைத்தவுடன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள்ள ஓய்வூதியத்தை இல்லாமல் செய்ய தீர்மானித்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறைப் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
Comments
Post a comment