ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் ஹோட்டல் பாடசாலை ஒன்றுக்கான புதிதாக நிருமாணிக்கப்பட்ட கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது
இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் ஹோட்டல்
பாடசாலை ஒன்றுக்கான புதிதாக நிருமாணிக்கப்பட்ட
கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது
சுமார் 175 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட
குறித்த கட்டிடமானது இன்று (24) பிரதியமைச்சர்
அப்துலலா மஃறூப் அவர்களின் வேண்டூகோளிற்கிணங்க
வர்த்ததவாணிப கைத்தொழில் கூட்டூறவு,நீண்ட காலம்
இடம் பெயர்ந்தோரை மீளக்குடியேற்றுதல் மற்றும் திறன்
அபிவிருத்தி அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களால்
உத்தியோகபூர்வமாக திறநது வைக்கப்பட்டது.
இப்பகுதி இளைஞர்களின் நீண்ட கால தேவையாக இருந்த
இக் ஹோட்டல் பாடசாலை மூலமாக ஷஹோட்டல்
முகாமைத்துவ பாடநெறிகள் இடம் பெற்று வருகின்றது
இதனால் இளைஞர் யுவதிகள் குறித்த துறையில் தொழிற்
தகைமை சான்றிதழ் பெறக்கூடியதும் தொழிற்தகைமை
மிக்கவராகவும் காணப்படூவார்கள் என
எதிர்பார்க்கப்படூகிறது இதில் துறை முகங்கள் கப்பற் துறை
பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப், தொழிற் பயிற்சி
அதிகார சபையின் உயரதிகாரிகள்,பயிற்சி தொடர்பான
இளைஞர் யுவதிககள் என பலர் பங்கு கொண்டார்கள்.
-ACMC ஊடகப்பிரிவு
Comments
Post a comment