ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
இலங்கையை வலுவான பொருளாதாரம் கொண்ட தேரவாத பௌத்த நாடாக மாற்ற போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குருணாகல் மற்றும் மலாபே ஆகிய இடங்களில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக நாம் இங்கு வந்துள்ளோம். இது நாட்டுக்காக செய்ய வேண்டிய கடமை.
நாங்கள் பௌத்த சமயத்தின் வளர்ச்சிக்காக அதிகளவான வேலைகளை செய்துள்ளோம். “புதுபுத் சுரக்ஷ” என்ற காப்புறுத் திட்டத்தின் மூலம் பௌத்த பிக்குகளுக்கு காப்புறுதிகளை வழங்க அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா நடவடிக்கை எடுத்துள்ளார்.
அறநெறி பாடசாலைகளை மேம்படுத்த அறநெறி பாடசாலை கட்டிடங்களை நிர்மாணித்தோம். பிக்குமாரின் இருப்பிடங்களை நிர்மாணிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். விகாரைகளை நிர்மாணிக்கவும் புனரமைக்கவும் பெருமளவு நிதி வழங்கப்பட்டுள்ளது எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
-JM
Comments
Post a comment