ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
ஆள்துளை கிணற்றில் சிக்கி 3-வது நாளாக தவித்து வரும் சுர்ஜித் சுய நினைவை இழந்து இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் திருச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் முதன்மை மருத்துவர் கூறுகையில், “குழந்தை சுர்ஜித் உயிரோடு இருப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். அதற்கான அறிகுறிகள் எங்களுக்கு தெளிவாக தெரிகின்றன. குழந்தையின் உடல் வெப்ப நிலையை வைத்து குழந்தை உயிரோடிருப்பதை எங்களால் உறுதி செய்ய இயன்றது.
ஆனால் குழந்தை தன்னுடைய சுயநினைவை இழந்து விட்டது. 75 மணி நேரம் சுயநினைவை இழந்தால் கூட குழந்தையை மீட்பதற்கான அனைத்து வசதிகளும் இங்கு தயார் செய்யப்பட்டுள்ளன. குழந்தையை காப்பாற்றுவதற்கான அனைத்து வசதிகளும் நிரம்பிய 5 அம்புலன்ஸ்கள் இங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விரைவில் குழந்தையை வெளியே எடுத்துவிட்டால், குழந்தையை மீட்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன” என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியானது அப்பகுதி மக்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Post a comment