ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் XI அணிகளுக்கு இடையிலான நட்பு 20 க்கு 20 போட்டி இன்று கென்பெராவில் நடைபெற்றது. இந்த போட்டியின் இடையில் அவுஸ்திரேலியாவின் பிரதமர் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்து அணைத்துஅனைவரையும் உட்சாகப்படுத்தினார்.
இப்போட்டியில் இலங்கை அணி 131 ஓட்டங்களைப்பெற்றதோடு பிரதமர் XI அணி 132 ஓட்டங்களைப்பெற்று 1 விக்கட்டுகளால் வெற்றியீட்டியது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது t20 போட்டி எதிர்வரும் 27 ஆம் திகதி ஓவல் மைதானத்தில் நடைபெறவிருக்கின்றது.
Comments
Post a comment