ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
தமிழ் தரப்பு ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்று முடிவெடுக்கவில்லை என சொல்லிக்கொண்டாலும் அவர்களில் பலர் ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள்.
தொண்டமான், பிள்ளையான், டக்ளஸ் போன்றோர் கோட்டாவுக்கு என அறிவித்து விட்டனர்.
மனோ, திகா போன்றோர் சஜித்துக்கு என அறிவித்து விட்டார்கள்.
தமிழ் கூட்டமைப்பு யாருக்கு என அறிவிக்காவிட்டாலும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜித்துக்கு வாக்களிப்பதே நல்லது என கூறிவருகிறார்கள். விரைவில் சஜித்துக்கான அறிவிப்பை வெளியிடுவர்.
ஆக மொத்தத்தில் தமிழ் தரப்பினர் தம் முடிவை அறிவித்து விட்டனர் என்பதே உண்மை.
அதே போல் முஸ்லிம் கட்சிகளும் அறிவித்து விட்டன. முஸ்லிம் காங்கிரசை நம்பி 19 வருடமாக ஏமாறும் கூட்டம் சஜித்துக்கு வாக்களிக்கும். அரசியலில் உண்மையை பேசும் தேசிய காங்கிரஸ், உலமா கட்சி போன்றவற்றின் கருத்துக்களை ஏற்றோர் கோட்டாவுக்கு வாக்களிப்பர்.
சஜித் வந்தால் இந்த நாலரை வருடமும் அடி வாங்கிய போது "முதுகெலும்பில்லாத இந்த ஆட்சிக்கு பாடம் புகட்டுவோம்" என ஹக்கீம் தரப்பு புலம்பியது போல் ஒப்பாரி வைக்க வேண்டியதுதான்.
முஸ்லிம்களின் வாக்கு பலத்தினால் கோட்டா வென்றால் நிச்சயம் இனவாதத்தை குறைக்க முடியும் என்பதே எமது கருத்து.
எதிர் காலம் எப்படி இருக்கும் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும். ஆனாலும் இந்த நாலரை வருட சஜித் அமைச்சராக இருக்கும் இந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு நன்மை கிடைத்ததாக உறுதியுள்ளவர்கள் சஜித்துக்கு வாக்களிக்கலாம். முஸ்லிம்களில் 90 வீதம் மஹிந்தவுக்கு வாக்களித்திராத நிலையிலும் மஹிந்த ஆட்சி முஸ்லிம்களுக்கு 90 வீதம் சாதகமாக இருந்தது என்பதை புரிந்தவர்கள் கோட்டாவுக்கு வாக்களிக்கலாம்.
- முபாறக் அப்துல் மஜீத்
தொண்டமான், பிள்ளையான், டக்ளஸ் போன்றோர் கோட்டாவுக்கு என அறிவித்து விட்டனர்.
மனோ, திகா போன்றோர் சஜித்துக்கு என அறிவித்து விட்டார்கள்.
தமிழ் கூட்டமைப்பு யாருக்கு என அறிவிக்காவிட்டாலும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜித்துக்கு வாக்களிப்பதே நல்லது என கூறிவருகிறார்கள். விரைவில் சஜித்துக்கான அறிவிப்பை வெளியிடுவர்.
ஆக மொத்தத்தில் தமிழ் தரப்பினர் தம் முடிவை அறிவித்து விட்டனர் என்பதே உண்மை.
அதே போல் முஸ்லிம் கட்சிகளும் அறிவித்து விட்டன. முஸ்லிம் காங்கிரசை நம்பி 19 வருடமாக ஏமாறும் கூட்டம் சஜித்துக்கு வாக்களிக்கும். அரசியலில் உண்மையை பேசும் தேசிய காங்கிரஸ், உலமா கட்சி போன்றவற்றின் கருத்துக்களை ஏற்றோர் கோட்டாவுக்கு வாக்களிப்பர்.
சஜித் வந்தால் இந்த நாலரை வருடமும் அடி வாங்கிய போது "முதுகெலும்பில்லாத இந்த ஆட்சிக்கு பாடம் புகட்டுவோம்" என ஹக்கீம் தரப்பு புலம்பியது போல் ஒப்பாரி வைக்க வேண்டியதுதான்.
முஸ்லிம்களின் வாக்கு பலத்தினால் கோட்டா வென்றால் நிச்சயம் இனவாதத்தை குறைக்க முடியும் என்பதே எமது கருத்து.
எதிர் காலம் எப்படி இருக்கும் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும். ஆனாலும் இந்த நாலரை வருட சஜித் அமைச்சராக இருக்கும் இந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு நன்மை கிடைத்ததாக உறுதியுள்ளவர்கள் சஜித்துக்கு வாக்களிக்கலாம். முஸ்லிம்களில் 90 வீதம் மஹிந்தவுக்கு வாக்களித்திராத நிலையிலும் மஹிந்த ஆட்சி முஸ்லிம்களுக்கு 90 வீதம் சாதகமாக இருந்தது என்பதை புரிந்தவர்கள் கோட்டாவுக்கு வாக்களிக்கலாம்.
- முபாறக் அப்துல் மஜீத்
Comments
Post a comment