ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
பகிரங்க விவாதத்திற்கு சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்தமை தொடர்பில்
கோட்டாபய ராஜபக்ஸ தரப்பினால் கடந்த சில தினங்களாக கருத்து தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மக்கள் விடுதலை முன்னணி இந்த இரண்டு வேட்பாளர்களுக்கும் சவால் விடுத்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் சஜித் பிரேமதாச இருவரும் அனுரகுமார திசாநாயக்கவுடன் விவாதத்திற்கு வர வேண்டும் எனவும் விவசாயம், கைத்தொழிலை எவ்வாறு மேம்படுத்துவது, கல்வியை எவ்வாறு மேம்படுத்துவது, வீதிகளை எவ்வாறு அமைப்பது, பொருளாதாரத்தை மேம்படுத்தி நாட்டு மக்கள் வாழக்கூடிய வகையில் நாட்டை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது தொடர்பில் இவ்விருவரும் அனுரகுமார திசாநாயக்கவுடன் விவாதிக்க வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
Comments
Post a comment