ஜே.வி.பி.யின் குற்றச்சாட்டை ஜனாதிபதி செயலகம் மறுப்பு
ஜனாதிபதியின் தனிப்பட்ட பாவனைக்கு 800 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானதும் எவ்வித அடிப்படையற்றதாகுமென்றும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தின் இடைக்கால கணக்கறிக்கை மூலம் ஜனாதிபதிக்காக மேலும் 240 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இச்செய்தி குறித்து ஜனாதிபதி செயலகம் தெளிவாக விளக்கமளித்துள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பதவி வகித்த அல்லது பதவி வகிக்கும் எந்தவொரு ஜனாதிபதிக்கும் தனிப்பட்ட பாவனைக்காக நிதி ஒதுக்கப்படுவதில்லை. அந்த நிதி தமது அலுவலகத்திற்கே ஒதுக்கப்படுகிறதுது.
தற்போதைய ஜனாதிபதியின் செலவுத் தலைப்பில் பெருமளவான நிதி, ஒதுக்கப்பட்டிருப்பது தற்போது நடைமுறைப்படுத்தப்படும் ஜனாதிபதி விசேட செயலணிகள் மற்றும் ஏனைய நிகழ்ச்சித் திட்டங்களுக்கேயாகும்.
ஜனாதிபதியின் தனிப்பட்ட பாவனைக்கு எந்த வகையிலும் நிதி ஒதுக்கப்படவில்லை. இத்தகைய விசமத்தனமான குற்றச் சாட்டுக்களை முற்றிலும் நிராகிப்பதாகவும் ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது
Comments
Post a Comment