ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் செங்கலடி
- பதுளை வீதியின் போக்குவரத்து இன்று (29) அதிகாலை முதல் தடைப்பட்டுள்ளது.
செங்கலடி – பதுளை வீதி புனரமைப்பு வேலைகள் நடைபெற்றுவரும் நிலையில் கோப்பாவெளியில் பாலம் நிர்மானிப்பதற்காக அமைக்கப்பட்ட மாற்று வீதி வெள்ளத்தினால் பாதிக்க்பபட்டதன் காரணமாக போக்குவரத்துக்க பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் ந. வில்வரெடனம் தெரிவித்தார்.
இதன் காரணமாக செங்கலடி பதுளை வீதியினூடாக தூரப் பிரதேசங்களுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் மாற்றுவழியினைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தும்பானஞ்சோலை பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு நீர் வெலிக்காகண்டியை ஊடறுத்துச் செல்வதால் மாற்றுவழிப் பாதை சேதமடைந்துள்ளது.
குறித்த பகுதியில் நீரோட்டாம் அதிகமாக உள்ளதனால் வீதியின் செப்பனிடும் பணிகள் தடைப்பட்டுள்ளன.
- பதுளை வீதியின் போக்குவரத்து இன்று (29) அதிகாலை முதல் தடைப்பட்டுள்ளது.
செங்கலடி – பதுளை வீதி புனரமைப்பு வேலைகள் நடைபெற்றுவரும் நிலையில் கோப்பாவெளியில் பாலம் நிர்மானிப்பதற்காக அமைக்கப்பட்ட மாற்று வீதி வெள்ளத்தினால் பாதிக்க்பபட்டதன் காரணமாக போக்குவரத்துக்க பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் ந. வில்வரெடனம் தெரிவித்தார்.
இதன் காரணமாக செங்கலடி பதுளை வீதியினூடாக தூரப் பிரதேசங்களுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் மாற்றுவழியினைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தும்பானஞ்சோலை பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு நீர் வெலிக்காகண்டியை ஊடறுத்துச் செல்வதால் மாற்றுவழிப் பாதை சேதமடைந்துள்ளது.
குறித்த பகுதியில் நீரோட்டாம் அதிகமாக உள்ளதனால் வீதியின் செப்பனிடும் பணிகள் தடைப்பட்டுள்ளன.
Comments
Post a comment