ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
ஏறாவூர் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் சமூக சேவைகள் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி சாஹிர் மௌலானா விடுத்த கோரிக்கைக்கு இணங்க சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் சுகாதார அமைச்சின் அதிகாரிகாரிகளை இன்று [24.10.2019] அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை விரைவில் நிவர்த்தி செய்வதற்கும் ஏனைய அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கும் இந்தக் கூட்டத்தில் தீர்மானமெடுக்கப்பட்டது.
-ACMC ஊடகப்பிரிவு
Comments
Post a comment