ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
பாராளுமன்ற உறுப்பினர் A.H.M.பௌசி தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை இன்று -27- முன்வைத்தார்.
தான் கூறாத கருத்தொன்றை தவறான முறையில் ஊடகங்கள் வௌியிட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அவர் இன்று சென்றிருந்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் A.H.M.பௌசி தெரிவித்ததாவது,
எனது உரையை திரிவுபடுத்தி வௌியிட்டு, எனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக நான் வந்தேன். நான் கூறாத கருத்தொன்றை வௌியிட்டுள்ளனர். இந்த கட்சியை நாம் பாதுகாக்க வேண்டும் எனின், இந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸவை தோற்கடிக்க வேண்டும் என கூறினேன். தோற்கடிக்க வேண்டும் என கூறிய வார்த்தையை தவறான வகையில் ஹிரு மக்களுக்கு ஔிப்பரப்பாக்கியுள்ளது. இதன் ஊடாக எமது உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் காணப்படுகின்றது
என குறிப்பிட்டார்.
பின்னர் பொலிஸ் தலைமையகத்திற்கு சென்று, தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.
-ஜப்னாமுஸ்லிம்
Comments
Post a comment