ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
போலி தகவல்களை பரப்பும் கீழ்த்தரமான, அரசியல் பரப்புரையை கைவிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம் - எஸ்.எம்.மரிக்கார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரிவினைவாத கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஒருபோதும் ஏற்கமாட்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று -22- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படு பயங்கரமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் அப்படியான யோசனைகள் முன்வைக்கப்படவில்லை என்பதை கூறிக்கொள்வதுடன், போலி தகவல்களை பரப்பும் கீழ்த்தரமான அரசியல் பரப்புரையை கைவிடுமாறு மஹிந்த தரப்பிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
அதேபோல் கடந்த நான்கரை வருடங்களில் சமஷ்டி அல்ல, ஒரு பிரதேச செலயகத்தைகூட நாம் வழங்கவில்லை. எனவே, பிரிவினைவாத கோரிக்கைகளை எமது ஜனாதிபதி வேட்பாளர் ஒருபோதும் ஏற்கமாட்டார்.
ஒற்றையாட்சியை ஒருபோதும் கைவிடமாட்டோம். பௌத்த மதத்துக்கான முன்னுரிமையும் பாதுகாக்கப்படும். இது கூட்டமைப்புக்கும் நன்கு தெரியும் என்றும் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
-JM
Comments
Post a comment