நிலத் தொடர்பற்ற மாகாண சபை கோரியவர் எம்.எச்.எம். அஷ்ரப், அக்கரைப்பற்றை ஒரே இரவில் மாநகர சபையாக மாற்ற முடியுமென்றால், தனி மத்தி கல்வி வலயம் உருவாக்கமுடியுமென்றால் கல்முனைக்கு ஏன் முடியாது? என பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளமை சின்னத்தனமானதாகும்.
மாகாணம் என்பது கல்முனையை போன்ற சிறு பிரதேசம் அல்ல. அது ஒரு பெரு நிலப்பரப்பு. அப்படியிருந்தும் தலைவர் அஷ்ரப் முழு கிழக்கு மாகாணத்தையும் எமக்கு தரவேண்டும் என கேட்கவில்லை. கிழக்கில் முஸ்லிம்களும் தமிழர்களும் வாழ்வதால் முஸ்லிம் பிரதேசங்களை மட்டும் பிரித்து நிலத்தொடர்பற்ற சபையை கோரினார். அதைக்கூட ஏற்காத தமிழ் தீவிரவாதிகள் இப்போது கல்முனைக்கு அதனை உதாரணம் காட்டுவது வேடிக்கையானது.
அது மட்டுமல்லாது அஷ்ரப் தமிழர் பிரதேசங்களை நிலத்தொடர்பற்ற மாகாண கோரிக்கைக்குள் உட்புகுத்தவில்லை. ஆனால் கல்முனை உப தமிழ் செயலகத்துள் கல்முனை முஸ்லிம்களின் நிலங்களையும் வர்த்தக நிலையங்களையும் கள்ளத்தனமாக ஆயுத முணையில் உட்புகுத்தியுள்ளதை ஏன் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
மேற்படி கல்முனை நகரத்தை விட்டு விட்டு 99 வீதம் தமிழர் உள்ள பாண்டிருப்பு பிரதேச செயலகம் பெறுவதை முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை.
அதற்குள்ளும் ஒரு வீதம் முஸ்லிம்கள் வாழ்வது போல் கல்முனை நகரில் தமிழர்களும் வாழ்வர்.
நாம் தமிழ் மக்களின் வாழ்விடங்களை கேட்கவில்லை. எமது நிலங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டுள்ள செயலைத்தான் எதிர்க்கிறோம்.
அக்கரைப்பற்றுக்கு மாநகர சபை பெற்ற போது தமிழர் அதிகம் உள்ள ஆலையடி வேம்பு வேறாக பிரிக்கப்பட்டதும் அக்கரைப்பற்று முஸ்லிம்களின் கடைகள் அதற்குள் உள்வாங்கப்படவில்லை என்பது யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு காலத்தில் பயங்கரவாதியாக இருந்த சுரேஷ் பிரேமசந்திரனுக்கு தெரியாது.
உண்ணாவிரதம் இருப்போரை எதிர்த்து சத்தியகிரகம் இருந்தது அசிங்கம் என உண்ணாவிரதமும் வேண்டாம் சத்தியக்கிரகமும் வேண்டாம் என துப்பாக்கி ஏந்தி தோல்வியடைந்து சிங்களத்திடம் சரணடைந்த சுரேஷ் சொல்வதுதான் அசிங்கம்.
ஆகவே மீண்டும் நாம் சொல்கிறோம். கல்முனை பிரச்சினையை ஒரே நாளில் தீர்க்க முடியும். இது தமிழ் மக்களின் எமது நிலபுலன்களை விட்டுக்கொடுப்பதிலேயே உள்ளது.
கல்முனை பஸார் மற்றும் அது வரையிலான தெற்குப்பகுதி பிரதான வீதி என்பன தனி ஜீ எஸ் பிரிவாக ஆக்கப்பட்டு அதனை கல்முனை முஸ்லிம் செயலகத்துடன் இணைக்க நாம் ஒப்புதல் அளிக்கின்றோம் என தமிழர் தரப்பு கூறுமாயின் தமிழ் செயலகத்தை தரம் உயர்த்த தடை இருக்காது.
- உலமாக்கட்சி.
23.6.2019
மாகாணம் என்பது கல்முனையை போன்ற சிறு பிரதேசம் அல்ல. அது ஒரு பெரு நிலப்பரப்பு. அப்படியிருந்தும் தலைவர் அஷ்ரப் முழு கிழக்கு மாகாணத்தையும் எமக்கு தரவேண்டும் என கேட்கவில்லை. கிழக்கில் முஸ்லிம்களும் தமிழர்களும் வாழ்வதால் முஸ்லிம் பிரதேசங்களை மட்டும் பிரித்து நிலத்தொடர்பற்ற சபையை கோரினார். அதைக்கூட ஏற்காத தமிழ் தீவிரவாதிகள் இப்போது கல்முனைக்கு அதனை உதாரணம் காட்டுவது வேடிக்கையானது.
அது மட்டுமல்லாது அஷ்ரப் தமிழர் பிரதேசங்களை நிலத்தொடர்பற்ற மாகாண கோரிக்கைக்குள் உட்புகுத்தவில்லை. ஆனால் கல்முனை உப தமிழ் செயலகத்துள் கல்முனை முஸ்லிம்களின் நிலங்களையும் வர்த்தக நிலையங்களையும் கள்ளத்தனமாக ஆயுத முணையில் உட்புகுத்தியுள்ளதை ஏன் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
மேற்படி கல்முனை நகரத்தை விட்டு விட்டு 99 வீதம் தமிழர் உள்ள பாண்டிருப்பு பிரதேச செயலகம் பெறுவதை முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை.
அதற்குள்ளும் ஒரு வீதம் முஸ்லிம்கள் வாழ்வது போல் கல்முனை நகரில் தமிழர்களும் வாழ்வர்.
நாம் தமிழ் மக்களின் வாழ்விடங்களை கேட்கவில்லை. எமது நிலங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டுள்ள செயலைத்தான் எதிர்க்கிறோம்.
அக்கரைப்பற்றுக்கு மாநகர சபை பெற்ற போது தமிழர் அதிகம் உள்ள ஆலையடி வேம்பு வேறாக பிரிக்கப்பட்டதும் அக்கரைப்பற்று முஸ்லிம்களின் கடைகள் அதற்குள் உள்வாங்கப்படவில்லை என்பது யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு காலத்தில் பயங்கரவாதியாக இருந்த சுரேஷ் பிரேமசந்திரனுக்கு தெரியாது.
உண்ணாவிரதம் இருப்போரை எதிர்த்து சத்தியகிரகம் இருந்தது அசிங்கம் என உண்ணாவிரதமும் வேண்டாம் சத்தியக்கிரகமும் வேண்டாம் என துப்பாக்கி ஏந்தி தோல்வியடைந்து சிங்களத்திடம் சரணடைந்த சுரேஷ் சொல்வதுதான் அசிங்கம்.
ஆகவே மீண்டும் நாம் சொல்கிறோம். கல்முனை பிரச்சினையை ஒரே நாளில் தீர்க்க முடியும். இது தமிழ் மக்களின் எமது நிலபுலன்களை விட்டுக்கொடுப்பதிலேயே உள்ளது.
கல்முனை பஸார் மற்றும் அது வரையிலான தெற்குப்பகுதி பிரதான வீதி என்பன தனி ஜீ எஸ் பிரிவாக ஆக்கப்பட்டு அதனை கல்முனை முஸ்லிம் செயலகத்துடன் இணைக்க நாம் ஒப்புதல் அளிக்கின்றோம் என தமிழர் தரப்பு கூறுமாயின் தமிழ் செயலகத்தை தரம் உயர்த்த தடை இருக்காது.
- உலமாக்கட்சி.
23.6.2019
Post a Comment