எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
யாழ்.ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகில் உள்ள வீடொன்றில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் நடத்தியுள்ளனர்.
தேடுதலின் தொடர்ச்சியாக அங்கு பொலிஸார் பெருமளவில் குவிக்கப்பட்டும் வீதி தடை போடப்பட்டும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் அம்பாறை சாய்ந்தமருதைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் வாடகைக்கு அமர்ந்துள்ளார்.
தான் முட்டை பல்ப் (மின்குமிழ்) முகவர் எனவும் அதனை யாழ்ப்பாணத்தில் விநியோகிப்பதற்கு இங்கு வந்துள்ளதாகவும் கூறி வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார்.
எனினும் வாடகைக்கு குடியமர்ந்து சில மாதங்கள் ஆகிய போதும் அவர் மின்குமிழ் வியாபாரத்தில் ஈடுபடவில்லை என வீட்டு உரிமையாளரால் சந்தேகிக்கப்பட்டது.
அத்துடன், அவரிடம் பல கார்களிலும் வாகனங்களிலும் புதுப் புது நபர்கள் வந்து செல்வதையும் வீட்டு உரிமையாளரும் அயலவர்களும் கண்டு சந்தேகம் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நடாத்தப்பட்டதை அடுத்து குறித்த இளைஞரின் நடாமாட்டம் தொடர்பில் அச்சம் கொண்ட சிலர் இது குறித்து யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த தகவலின் அடிப்படையிலேயே மேற்படி சுற்றிவளைப்பு தேடுதர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும் இத் தேடுதல் நடவடிக்கையில் நேற்று இரவுரை எவரும் கைது செய்யப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Comments
Post a comment