ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
அதிவேக நெடுஞ்சாலைகளின் நுழைவுக் கட்டணங்கள் ஏப்ரல் முதல் அதிகரிப்பு
( மினுவாங்கொடை நிருபர் )
அதிவேகப் பாதைகளின் நுழைவுக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், வாகன நெரிசல் மிக்க நேரங்களின் போது, அதிவேகப் பாதைகளின் நுழைவுக் கட்டணத்தை 100 ரூபாவினால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண அதிகரிப்பு, 2019 ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்குக்கு வரும் வகையில் நடைமுறைக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக, அதிவேக நெடுஞ்சாலைகள் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.
Comments
Post a comment