ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
அம்பாறை மாவட்ட பொத்துவில் பிரதேசத்தில் இருக்கின்ற பழமை வாய்ந்த பாடசாலையினை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த பல்வேறு வகையிலும் முயற்சிகள் இடம் பெற்றது.
இச் சந்தர்ப்பத்தில் அண்மையில் நியமிக்கப்பட்டு இருந்த கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம்.ஹிஸ்புழ்ழாஹ் அவர்களின் கவனத்திற்கு இவ் வேண்டுகோளை அப் பிரதேசத்தை சேர்ந்த கல்வி மான்களும்,பாடசாலை சமூகமும், உள்ளூர் அரசியல் தலமைகளும் முன் வைத்தனர்.
மேற்படி பாடசாலையினை மத்திய அரசின் கீழ் தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு கிழக்கு ஆளுநரின் அனுமதியையடுத்து. கல்வி அமைச்சு தேசிய பாடசாலையாக தரமுயர்த்தியுள்ளது.
அதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தினை ஆளுநர் இன்று(16.02.2019) அம்பாறை ஆளுநர் பணிமனையில் வைத்து பாடசாலையின் அதிபர்,பொத்துவில் உப வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அரசியல் தலைவர்கள்,ஊர்ப் பிரமுகர்கள் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக கையளிக்கத்தார்.
மேற்படி பாடசாலையினுடைய எதிர்கால வளர்ச்சிக்கு தன்னாலான ஒத்துழைப்பையும் , முயற்சியையும் வழங்குவதாக உறுதி மொழி வழங்கினார்.
இந் நிகழ்வில் பாடசாலை அதிபர்.உப வலயக் கல்வி பணிப்பாளர் ,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , பிரதேச சபை உறுப்பினர்களான மஜீட் மற்றும் அன்வர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்edia Coordinator Governor Eastern Province
Comments
Post a comment