ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
மாணவர்கள் கல்வியில் விடா முயற்சியைக் கைவிடக்கூடாது
- அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ
( ஐ. ஏ. காதிர் கான்)
ஊவா மாகாணத்திலிருந்து வெளிநாடுகளில் தொழில் புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் வழங்கும் திட்டமொன்று, (05) சனிக்கிழமையன்று, பதுளையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இத்திட்டத்தின் கீழ், 3,313 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, இப்புலமைப் பரிசில்களை, குறித்த மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.
அமைச்சர் இங்கு மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தும்போது,
ஒவ்வொரு மாணவர்களின் பெற்றோர்களும், தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை, மேலும் முன்னேற்றகரமானதாக மாற்றவேண்டும் என்ற நன்நோக்கிலேயே, வெளிநாடுகளில் பணிபுரிகின்றார்கள். தமது பிள்ளைகளின் கல்வித்தேவைகளை நிறைவு செய்யும் வகையிலேயே, அவர்கள் அங்கு கஷ்டப்பட்டு ஊதியம் சம்பாதிக்கின்றார்கள்.
எனவே, ஒவ்வொரு பிள்ளைகளும், தமது பெற்றோர்களின் கனவுகளை வீணடிக்காமல், சிதறடிக்காமல் நடந்துகொள்ள வேண்டியது அவசியம். பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்களுக்கேற்றவாறு, ஒவ்வொரு மாணவரும் தங்களது கல்வி நடவடிக்கைகளை, மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லவேண்டும். அதற்குத் தேவையான சகல வழிவகைகளையும், சிறப்பான முறையில் அமைத்துக் கொள்வாரேயானால், அதுதான் அம்மாணவர் பெறும் மாபெறும் சாதனையாகும். எனவே, ஒரு மாணவர் கல்வியின்பால் உள்ள தனது விடா முயற்சிகளை ஒருபோதும் கைவிடக் கூடாது. இவ்வாறு, திறமையாகவும், நன்நோக்காகவும், புரிந்துணர்வுடனும் கற்றுக்கொள்ளும் மாணவரின் எதிர்கால கல்வி வளர்ச்சிக்காக, தான் என்றும் உறுதுணையாக இருப்பேன் என்றார்.
Comments
Post a comment