ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் தூரநோக்கு சிந்தனையுடன் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான எம்.என் நஸீர் (MA)யின் ஆலோசனையில் பிரதேசசபை வேட்பாளர்களான அமீர் சுல்தான், மின்னதுல்லாஹ் ஆகியோரது வேண்டுகோளுக்கினங்க குளியாப்பிடிய பிரதேசசபை உப தவிசாளர் எம்.சி இர்பான் மற்றும் பிரதேசசபை உறுப்பினர் சபீர் ஆகியோரின் நிதியொதுக்கீட்டில் கெகுணகொல்ல ஊடாக, கால்லேகம பிரதேசசபை வேட்பாளர் அமீர் சுல்தானின் வீட்டுக்கு செல்லும் உள்வீதி மோட்டகேட்டர் மூலம் செப்பனிடும் வேலைகள் நேற்று (26) நடைபெற்றது.
இந்த நிலையில் இந்த வேலைகளை நேற்று (26) முன்னால் மாகாணசபை உறுப்பினர் நஸீர், உப தவிசாளர் இர்பான், குளியாப்பிடிய பிரதேசசபை உறுப்பினர் சபீர் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் சிலரும் இவ்வேலைகளை நேரடியாக சென்று பார்வையிட்டார்.
Comments
Post a comment