முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
மக்களுக்கு அதிக பணிகளைச் செயயும் ஆண்டாக மிளிரட்டும் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ ( ஐ. ஏ. காதிர் கான் ) மலர்ந்துள்ள 2019 புத்தாண்டு, சமாதானம் செளபாக்கியம் நிறைந்த ஆண்டாக, இலங்கை வாழ் சகல மக்களின் வாழ்விலும் பரிணமிக்கப் பிரார்த்திப்பதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, மலர்ந்துள்ள புத்தாண்டு, நமது இலங்கை வாழ் மக்களுக்கு மகிழ்ச்சி பொங்கும் ஒரு ஆண்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. காரணம், சவால்களை வெற்றிகொள்ளக் கூடிய திறன், தற்போதைய அரசாங்கத்திடம் உள்ளது. இதை நான் நம்பிக்கையோடு தெரிவித்துக் கொள்கின்றேன். குறுகிய காலத்தில், அதிகமான மக்கள் பணிகளைச் செய்யவேண்டிய பிரதான சவால்களுடன், தற்போதைய அரசாங்கம் பதவிகளைப் பொறுப்பேற்றுள்ளது. இப்பொறுப்புக்கள் அனைத்தும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மேற்கொள்ளப்படும். சகல மக்களுக்கும் தேவையான மிகச் சிறந்த சந்தர்ப்பங்களும், இதன்மூலம் முன்னெடுக்கப்படும். இவற்றை