ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
( மினுவாங்கொடை நிருபர் )
எரிபொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ள நிலையில், பஸ் கட்டணங்களையும் இரண்டு வீதத்தால் குறைப்பதற்கு, தனியார் பஸ் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில், பஸ் கட்டணங்களைக் குறைப்பதற்குத் தயாராகவுள்ளதாக, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், எரிபொருட்களின் விலைகள் குறைப்பிற்கமைய பஸ் கட்டணங்களைக் குறைப்பது தொடர்பில், குறித்த நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி, தகுந்த தீர்மானமொன்றை எடுப்பதாக, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பஸ் கட்டணங்களின் திருத்தம் தொடர்பில், எதிர்வரும் நாட்களில் சரியான தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக, அனைத்து மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜித்தகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனடிப்படையில், பஸ் கட்டணங்களைக் குறைப்பதற்குத் தயாராகவுள்ளதாக, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், எரிபொருட்களின் விலைகள் குறைப்பிற்கமைய பஸ் கட்டணங்களைக் குறைப்பது தொடர்பில், குறித்த நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி, தகுந்த தீர்மானமொன்றை எடுப்பதாக, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பஸ் கட்டணங்களின் திருத்தம் தொடர்பில், எதிர்வரும் நாட்களில் சரியான தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக, அனைத்து மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜித்தகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.
Comments
Post a comment