ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக
தெரிவு செய்யப்பட்ட ஹிஸ்புல்லாஹ்வுக்கு கௌரவிப்பு
======================================================
உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை பாராட்டி கௌரவிக்கும் மாபெரும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மேற்படி நிகழ்வு நடைபெறவுள்ளது.
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மக்காவில் நடைபெற்று வருகின்ற அதன் 43ஆவது அதியுயர் சபை பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
இதனை வரவேற்கும் வகையில் காத்தான்குடி பொது மக்களால் குறித்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
Comments
Post a comment