முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
கண்டி - திகன பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த இனவாத கலவரத்தின் பின்னணியில் அரசாங்கம் இருந்தது என்ற தகவலை பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா வெளியிட்டு விடுவார் என்ற அச்சம் காரணமாகவே, நாலக சில்வாவை கைதுசெய்யவும், பணியில் இருந்து இடைநீக்கம் செய்யவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று -18- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாலக டி சில்வா பிணை வழங்க முடியாத குற்றமான அரச விரோத சதித்திட்டத்தை மேற்கொண்டுள்ளார். இதனால், அவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
அவர் வெளியில் இருப்பதனால், சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கவும் சாட்சியங்களை அழிக்கவும் வாய்ப்பு இருப்பதுடன் மக்கள் கலவரமடைய காரணமாக அமையும் என்பதால், இவ்வாறான குற்றத்தை செய்தவர் பிணை வழங்கப்படாமல் விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும் பிணை தொடர்பான சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
அரச தலைவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை என்பது சாதாரண கொலை முயற்சியல்ல. அது அரச விரோத சதித்திட்டம். எனினும் நாலக டி சில்வா இதுவரை கைதுசெய்யப்படவில்லை. இந்த அரசாங்கம் நாலக டி சில்வாவை கண்டு பயப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் திகனையில் நடந்த கலவரத்தின் பின்னணியில் அரசாங்கமே இருந்தது. அது இனவாத கலவரமல்ல, அரசாங்கம் முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட அரச பயங்கரவாதம்.
பேராசிரியர் ராஜன் ஹூல் கூறியுள்ளது போல் 1983ம் ஆண்டு ஜூலை கலவரத்தை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்படுத்தியது போல், 2018ம் ஆண்டு முஸ்லிம் விரோத கலவரத்தையும் அந்த கட்சியே ஏற்படுத்தியது.
பாரிய தேர்தல் தோல்விக்கு பின்னர் அரசாங்கம் பதவி விலகும் என சமூகத்தில் ஏற்பட்ட நிலைப்பாடுகளை வேறு பக்கம் திசை திருப்பும் தேவை அரசாங்கத்திற்கு இருந்தது.
இதன் காரணமாகவே தெல்தெனிய முதல் திகனை வரை ஆறு கிலோ மீற்றர் வரை கலவரத்தில் ஈடுபட்டவர்கள் சொத்துக்களை அழித்து முன்னோக்கி செல்லும் போது பொலிஸார் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
இவை அனைத்தையும் அழகாக மூடி மறைத்து வேறு தரப்பினர் மீது பிரதிப் பொலிஸ் மா அதிபர் குற்றத்தை சுமத்தினார்.
இதன் காரணமாகவே அரசாங்கம் அவரை பணி இடைநீக்கம் செய்யவும் கைதுசெய்யவும் அஞ்சுகிறது எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று -18- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாலக டி சில்வா பிணை வழங்க முடியாத குற்றமான அரச விரோத சதித்திட்டத்தை மேற்கொண்டுள்ளார். இதனால், அவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
அவர் வெளியில் இருப்பதனால், சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கவும் சாட்சியங்களை அழிக்கவும் வாய்ப்பு இருப்பதுடன் மக்கள் கலவரமடைய காரணமாக அமையும் என்பதால், இவ்வாறான குற்றத்தை செய்தவர் பிணை வழங்கப்படாமல் விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும் பிணை தொடர்பான சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
அரச தலைவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை என்பது சாதாரண கொலை முயற்சியல்ல. அது அரச விரோத சதித்திட்டம். எனினும் நாலக டி சில்வா இதுவரை கைதுசெய்யப்படவில்லை. இந்த அரசாங்கம் நாலக டி சில்வாவை கண்டு பயப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் திகனையில் நடந்த கலவரத்தின் பின்னணியில் அரசாங்கமே இருந்தது. அது இனவாத கலவரமல்ல, அரசாங்கம் முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட அரச பயங்கரவாதம்.
பேராசிரியர் ராஜன் ஹூல் கூறியுள்ளது போல் 1983ம் ஆண்டு ஜூலை கலவரத்தை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்படுத்தியது போல், 2018ம் ஆண்டு முஸ்லிம் விரோத கலவரத்தையும் அந்த கட்சியே ஏற்படுத்தியது.
பாரிய தேர்தல் தோல்விக்கு பின்னர் அரசாங்கம் பதவி விலகும் என சமூகத்தில் ஏற்பட்ட நிலைப்பாடுகளை வேறு பக்கம் திசை திருப்பும் தேவை அரசாங்கத்திற்கு இருந்தது.
இதன் காரணமாகவே தெல்தெனிய முதல் திகனை வரை ஆறு கிலோ மீற்றர் வரை கலவரத்தில் ஈடுபட்டவர்கள் சொத்துக்களை அழித்து முன்னோக்கி செல்லும் போது பொலிஸார் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
இவை அனைத்தையும் அழகாக மூடி மறைத்து வேறு தரப்பினர் மீது பிரதிப் பொலிஸ் மா அதிபர் குற்றத்தை சுமத்தினார்.
இதன் காரணமாகவே அரசாங்கம் அவரை பணி இடைநீக்கம் செய்யவும் கைதுசெய்யவும் அஞ்சுகிறது எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a comment