முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
( ஐ. ஏ. காதிர் கான் )
கடந்த மூன்று வருட காலப்பகுதியில், பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஜீ. எச். மனதுங்க தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர, பொலிஸார் பக்கச்சார்பான முறையில் நடந்து கொண்டமை, இலஞ்சம் பெற்றுக்கொண்டமை தொடர்பிலும் தமது ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஜீ. எச். மனதுங்க கூறியுள்ளார்.
இவற்றில், 90 வீதமான முறைப்பாடுகள் தொடர்பில் தீர்வுகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் ஆணைக்குழுவிற்கு மேலும் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில், தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர, பொலிஸார் பக்கச்சார்பான முறையில் நடந்து கொண்டமை, இலஞ்சம் பெற்றுக்கொண்டமை தொடர்பிலும் தமது ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஜீ. எச். மனதுங்க கூறியுள்ளார்.
இவற்றில், 90 வீதமான முறைப்பாடுகள் தொடர்பில் தீர்வுகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் ஆணைக்குழுவிற்கு மேலும் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில், தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
Comments
Post a comment