ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
ஊடகவியலாளர்கள்
இன மத மொழி பேதங்களின்றி எழுதினால்
தேசிய நல்லிணக்கத்தை உருவாக்க முடியும்
- டாக்டர் வில்பிரட் விஜேசிங்க
இன மத மொழி பேதங்களின்றி எழுதினால்
தேசிய நல்லிணக்கத்தை உருவாக்க முடியும்
- டாக்டர் வில்பிரட் விஜேசிங்க
( மினுவாங்கொடை நிருபர் )
ஊடகவியலாளர்கள் இன மத மொழி பேதங்களுக்கு அப்பால் நின்று எழுதினால், தேசிய நல்லிணக்கத்தை இலங்கைக்குள் உருவாக்க முடியும்.
ஊடகவியலாளர்கள் உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்துவதில் எவ்விதத் தயக்கமும் கொள்ளத் தேவையில்லை.எமது நாட்டில் தற்போது ஊடகச் சுதந்திரம் இருக்கின்றது.
இதனை எம்மால்
அச்சமின்றி பயன்படுத்திக் கொள்ள முடியும் என, கம்பஹா "சுமேத" கல்லூரியின் பணிப்பாளரும் "லக்மவ" (கம்பஹா மாவட்ட வாராந்த பத்திரிகை) செய்திப் பத்திரிகையின் நிறைவேற்று அதிகாரியுமான விஷேட வைத்திய நிபுணர் டாக்டர் வில்பிரட் விஜேசிங்க தெரிவித்தார்.
கம்பஹா "லக்மவ" பத்திரிகையின் ஊடகவியலாளர்களை சந்திக்கும் நிகழ்வு நேற்று முன் தினம் (18) சனிக்கிழமை கம்பஹா "சுமேத" கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
"லக்மவ" பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சுனித் ரொட்ரிகோ தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் டாக்டர் வில்பிரட் விஜேசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,
"சகல மதங்களுக்கும் "லக்மவ" பத்திரிகை முன்னுரிமை கொடுத்து வருகின்றது.மதச் சுதந்திரத்தை எமது நாடு பேணி வருகின்றது.
இதனை "லக்மவ" பத்திரிகை கடந்த ஐந்து வருடங்களாகப் பேணிப் பாதுகாத்துக் கொண்டு வருகின்றது. இனம், மதம், மொழி என்பன ஒரு நாட்டின் பொதுவான விடயம். நாம் ஐக்கியமாகவே எமது நாட்டில் வாழ்ந்து கொண்டு வருகின்றோம்.
எமது பத்திரிகை தனிப்பட்ட கட்சியொன்றின் சார்பாகவோ அல்லது தனிப்பட்ட மதமொன்றுக்கு சார்பாகவோ செய்திகளை வெளியீடு செய்யும் வாராந்தப் பத்திரிகையொன்றல்ல.
செய்திப் பத்திரிகைகள் பொதுமக்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி,
அவற்றைத் தீர்த்து வைப்பதற்கு வழியமைக்க வேண்டும்.
இவற்றிலிருந்து விலகிச் செல்வதற்கு முனையக் கூடாது.
எனவே, உண்மையை உண்மையாகவே வெளிப்படுத்தும் உரிமையை ஊடகவியலாளர்கள் பேண வேண்டும். அன்றாடம் பல செயற்பாடுகள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன. இதனை நாம் பக்கச்சார்பாக எடுக்கக் கூடாது.
அவை கசப்பானதாக இருந்தாலும் சரி, அதிலுள்ள நம்பகத் தன்மையைப் பேணிப் பாதுகாத்து வெளிப்படுத்த வேண்டும். கம்பஹா மாவட்டத்திலுள்ள நகரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் பிரச்சினைகளை மட்டும் நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு எமது பயணத்தைத் தொடரக் கூடாது.கிராமியப்புறங்களில் வாழுகின்ற மக்களின் நலன்களுக்காகவும் எமது பத்திரிகை உழைக்க வேண்டும்.அதில் நாம் சமயங்களின் வேறுபாடுகளையோ மொழி வேறுபாடுகளையோ கவனத்தில் கொள்ளக் கூடாது என்றார்.
இவ் வைபவத்தில் "லக்மவ" பத்திரிகையின் செய்தி ஆசியர்கள், துணை ஆசிரியர்கள் உட்பட குறித்த பத்திரிகையின் கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.
ஊடகவியலாளர்கள் உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்துவதில் எவ்விதத் தயக்கமும் கொள்ளத் தேவையில்லை.எமது நாட்டில் தற்போது ஊடகச் சுதந்திரம் இருக்கின்றது.
இதனை எம்மால்
அச்சமின்றி பயன்படுத்திக் கொள்ள முடியும் என, கம்பஹா "சுமேத" கல்லூரியின் பணிப்பாளரும் "லக்மவ" (கம்பஹா மாவட்ட வாராந்த பத்திரிகை) செய்திப் பத்திரிகையின் நிறைவேற்று அதிகாரியுமான விஷேட வைத்திய நிபுணர் டாக்டர் வில்பிரட் விஜேசிங்க தெரிவித்தார்.
கம்பஹா "லக்மவ" பத்திரிகையின் ஊடகவியலாளர்களை சந்திக்கும் நிகழ்வு நேற்று முன் தினம் (18) சனிக்கிழமை கம்பஹா "சுமேத" கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
"லக்மவ" பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சுனித் ரொட்ரிகோ தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் டாக்டர் வில்பிரட் விஜேசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,
"சகல மதங்களுக்கும் "லக்மவ" பத்திரிகை முன்னுரிமை கொடுத்து வருகின்றது.மதச் சுதந்திரத்தை எமது நாடு பேணி வருகின்றது.
இதனை "லக்மவ" பத்திரிகை கடந்த ஐந்து வருடங்களாகப் பேணிப் பாதுகாத்துக் கொண்டு வருகின்றது. இனம், மதம், மொழி என்பன ஒரு நாட்டின் பொதுவான விடயம். நாம் ஐக்கியமாகவே எமது நாட்டில் வாழ்ந்து கொண்டு வருகின்றோம்.
எமது பத்திரிகை தனிப்பட்ட கட்சியொன்றின் சார்பாகவோ அல்லது தனிப்பட்ட மதமொன்றுக்கு சார்பாகவோ செய்திகளை வெளியீடு செய்யும் வாராந்தப் பத்திரிகையொன்றல்ல.
செய்திப் பத்திரிகைகள் பொதுமக்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி,
அவற்றைத் தீர்த்து வைப்பதற்கு வழியமைக்க வேண்டும்.
இவற்றிலிருந்து விலகிச் செல்வதற்கு முனையக் கூடாது.
எனவே, உண்மையை உண்மையாகவே வெளிப்படுத்தும் உரிமையை ஊடகவியலாளர்கள் பேண வேண்டும். அன்றாடம் பல செயற்பாடுகள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன. இதனை நாம் பக்கச்சார்பாக எடுக்கக் கூடாது.
அவை கசப்பானதாக இருந்தாலும் சரி, அதிலுள்ள நம்பகத் தன்மையைப் பேணிப் பாதுகாத்து வெளிப்படுத்த வேண்டும். கம்பஹா மாவட்டத்திலுள்ள நகரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் பிரச்சினைகளை மட்டும் நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு எமது பயணத்தைத் தொடரக் கூடாது.கிராமியப்புறங்களில் வாழுகின்ற மக்களின் நலன்களுக்காகவும் எமது பத்திரிகை உழைக்க வேண்டும்.அதில் நாம் சமயங்களின் வேறுபாடுகளையோ மொழி வேறுபாடுகளையோ கவனத்தில் கொள்ளக் கூடாது என்றார்.
இவ் வைபவத்தில் "லக்மவ" பத்திரிகையின் செய்தி ஆசியர்கள், துணை ஆசிரியர்கள் உட்பட குறித்த பத்திரிகையின் கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a comment