முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
==============================
உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் 71 ஆவது உயர்மட்ட மாநாடு ஜூலை மாதம் 30 ஆம் திகதி இந்தியாவின் தலைநகர் புது டில்லியில் சுகாதார,போசாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைசல் காசீமின் தலைமையில் தொடக்கி வைக்கப்பட்டது.
இந்த மாதம் இரண்டாம் திகதி வரை நான்கு நாட்களுக்கு இடம்பெறும் இந்த மாநாட்டில் இலங்கை உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகள் எதிர்நோக்கி வரும் சுகாதார சவால்கள் மற்றும் தேவைகள் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நாடுகள் எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கான பல தீர்மானங்கள் இம்மாநாட்டின் இறுதியில் எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் பைசல் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
பல நாடுகள் கலந்துகொண்டிருக்கும் இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு பிரதி அமைச்சர் பைசல் காசிமுக்கு வழங்கப்பட்டிருக்கின்றமை இலங்கைக்கு பெருமை சேர்க்கும் விடயம் என்பது குறிப்பிடத்தக்கது.
[ பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு ]
Comments
Post a comment