ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்களுக்கு
ஐம்பது லட்சம் ரூபா நிதி
-பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் ஒதுக்கீடு- -
============================== ====================
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பத்து பள்ளிவாசல்களின் திருத்த வேலைகளுக்காக சுகாதார,போசாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் தலா ஐந்து லட்சம் ரூபா வீதம் 50 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளார்.
அந்த பள்ளிவாசல்களின் நிர்வாக சபைகள் பிரதி அமைச்சரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி,நிந்தவூர் மஸ்ஜிதுல் முஜாஹிதீன் பள்ளிவாசல்,நிந்தவூர் மஸ்ஜிதுல் காஸிமி பள்ளிவாசல்,நிந்தவூர் மஸ்ஜிதுல் ஹுதா ஜூம்ஆ பள்ளிவாசல்,நிந்தவூர் மஸ்ஜிதுல் புர்கான் பள்ளிவாசல்,நிந்தவூர் ஜாமியுத் தஹ்ஹீத் பள்ளிவாசல்,ஒலுவில் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல்,பாலமுனை தானே அல்-புசைரி ஜூம்ஆ பள்ளிவாசல்,பொத்துவில் ரஹ்மானியா நகர் பள்ளிவாசல்,இறக்காமம் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் மாவடிப்பள்ளி புதிய ஜூம்ஆ பள்ளிவாசல் ஆகிய பத்து பள்ளிவாசல்களுக்கே இந்த நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த நிதி தற்போது பிரதி அமைச்சரால் அம்பாறை அரச அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மேற்படி பள்ளிவாசல்களுக்கு தலா ஐந்து ரூபா லட்சம் வீதம் பகிந்தளிக்குமாறு பிரதி அமைச்சரால் அரச அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
-பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு-
Comments
Post a comment