වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන් කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ . නියෝජ්ය පොලිස්පති , පොලිස් මාධ්ය ප්රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර
முன்னாள் அமைச்சர் அதாவுள்ளாவின் உதவியுடன் முதலில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் திருத்த சட்டம்.
உள்ளூராட்சி தேர்தல் சட்டம்
இலங்கை தேர்தல் வரலாற்றில் இரண்டு தேர்தல் முறைகள் அமுலில் இருந்துள்ளன. சுதந்திரத்தின் பின்னர் 1978ஆம் ஆண்டு வரையில் அமுலில் இருந்த தொகுதிவாரி தேர்தல் முறையும் 1978ஆம் ஆண்டு முதல் இன்று வரை அமுலில் இருக்கும் விகிதாசார தேர்தல் முறையுமே அவைகளாகும். இந்த இரண்டு முறையினதும் கலப்பு தேர்தல் முறையொன்றையே கடந்த வாரம் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தொகுதிவாரி தேர்தல் முறையினதும் விகிதாசார தேர்தல் முறையினதும் நல்ல அம்சங்களை பயன்படுத்திக் கொள்வதே புதிய சட்ட திருத்தத்தின் நோக்கமென கூறப்படுகிறது. ஆனால் கலப்பு தேர்தல் முறைக்குள் அவ்விரண்டு தேர்தல் முறைகளினதும் நல்ல அம்சங்கள் மட்டுமன்றி மோசமான அம்சங்களும் புகுந்து கொள்வதை தவிர்க்க முடியாது.
கடந்த வாரம் வியாழக்கிழமை உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பாக இரண்டு சட்ட திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் இந்த தேர்தல் திருத்த சட்டமே மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் அதன் மூலம் எதிர்கால அரசியல் கலத்தில் பாரிய மாற்றங்கள் இடம் பெறும் வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றன. அதேவேளை இந்த சட்ட மூலம் சிறுபான்மையினரின் அரசியலிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதே.
1978ஆம் ஆண்டு வரை இலங்கையில் தொகுதிவாரி தேர்தல் முறையே அமுலில் இருந்தது. 1978ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் மூலம் இந்த தேர்தல் மூறை ரத்துச் செய்யப்பட்டு விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆயினும் 1988ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறும் வரை நடைபெற்ற இடைத் தேர்தல்கள் தொகுதி வாரி தேர்தல் முறையிலேயே நடைபெற்றன. 1987ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் ஆரம்பம் முதல் விகிதாசார முறையிலேயே நடைபெற்று வருகின்றன.
தொகுதி வாரி தேர்தல் முறையில் ஒரு நாட்டில் அல்லது ஒரு பிரதேச சபைக்கான பிரதேசத்தில் பெரும்பான்மை வாக்குகளை பெறும் கட்சியொன்று பெரும்பான்மை ஆசனங்களை பெறும் என்ற உத்தரவாதம் இல்லை. அது அநீதியானது என வாதிட முடியும். அதேவேளை அம்முறையின் கீழ் விருப்பு வாக்குகளுக்காக ஒரே கட்சியை சேர்ந்தவர்களிடையே மோதல்கள் இடம்பெறுவதில்லை. விருப்பு வாக்கு முறையே அதில் இல்லை. அது அம்முறையில் காணப்படும் நல்ல அம்சமொன்றாகும்.
விகிதாசார முறையின் கீழ் பெரும்பான்மை வாக்குகளை பெறும் சட்சி பெரும்பான்மை ஆசனங்களை பெறும். ஆனால் அம்முறையின் கீழ் விருப்பு வாக்குகளுக்காக உட்கட்சி மோதல்கள் இடம் பெறும் வாய்ப்புக்கள் அதிகமாகும். அதேவேளை விகிதாசார முறையின் கீழ் குறிப்பிட்ட பிரதேசமொன்றுக்கு பொறுப்பான எம்..பிக்களோ அல்லது பிரதேச சபை உறுப்பினர்களோ இல்லை. தமது பிரதிநிதி யார் என்று மக்களுக்கு தெரியாது.
இதுபோன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே புதிய கலப்பு தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதிலும் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. புதிய முறைப் படி பிரதேச சபையொன்றின் ஆசனங்களில் 70 வீத ஆசனங்கள் தொகுதி வாரி தேர்தல் முறையில் நிரப்பப்படும். மிகுதி 30 வீத ஆசனங்களுக்கு விகிதாசார தேர்தல் முறையில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். இதனால் சில சிக்கல்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன.
இம் முறைப்படி உள்ளூராட்சி சபையொன்றின் தொகுதி வாரியாகவே முதலில் தேர்தல் நடைபெறும். அந்த தேர்தலின் முடிவுகளின் பிரகாரம் 5 வீத வெட்டுப் புள்ளிக்கு குறைவாக வாக்குகளை பெற்ற கட்சிகளின் வாக்குகள் முதலில் ஒதுக்கப்படும். பின்னர் தொகுதி வாரியாக பெரும்பான்மை வாக்குகளை பெற்றவர்கள் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவர். ஆதன் மூலம் உள்ளூராட்சி சபையின் ஆசனங்களில் 70 வீத ஆசனங்கள் நிரப்பப்படும்.
பின்னர் ஆசனங்களை பெற்றவர்களின் வாக்குகள் அவர்களது கட்சியின் மொத்த வாக்குகளில் இருந்து கழிக்கப்படும். அதன் பின்னர் ஒவ்வொரு கட்சியும் பெற்ற மீதமான மொத்த வாக்குகளின் விகிதாசாரப் படி ஏனைய 30 வீத ஆசனங்களுக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.
அந்த 30 வித ஆசனங்களுக்காக உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக ஒவ்வொரு கட்சியும் வௌ;வேறு வேட்பாளர் பட்டியல்களை சமர்பிக்கும். கட்சிக்கு கிடைக்கும் ஆசனங்களுக்காக உறுப்பினர்களை தெரிவு செய்யும் சட்டபூர்வ உரிமை கட்சியின் செயலாளருக்கே உள்ளது. ஆனால் அவர் இந்த பட்டியலில் இருந்து மட்டும் தான் உறுப்பினர்களை தெரிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தொகுதி வாரி தேர்தலின் போது தோல்வியடைந்த தமது கட்சி வேட்பாளர்களையும் அவர் இந்த ஆசனங்களுக்காக நியமிக்கலாம்.
ஒரு பிரதேச சபையின் தொகுதிகளுக்கான தேர்தலில் ஒரே கட்சி சகல ஆசனங்களையும் வெற்றி பெறலாம். அப்போது அக் கட்சி அப் பிரதேச சபையின் ஆசனங்களில் 70 வீதத்தை பெற்றுக் கொள்ளும். அத் தேர்தலில் இரண்டு கட்சிகள் மட்டுமே போட்டியிட்டு இருந்தால் மற்றக் கட்சி மிகுதி சகல ஆசனங்களையும் பெற்றுக் கொண்டாலும் அது மொத்த ஆசனங்களில் 30 வீதம் மட்டுமே.
அதாவது இரண்டு கட்சிகள் போட்டியிட்டு, ஒரு கட்சி 51 வீதமான வாக்குகளை பெற்றும் சகல தொகுதிகளையும் வென்றும் இருந்தால் அக் கட்சிக்கும் 70 வீத ஆசனங்கள் கிடைக்கும். மற்றக் கட்சி மிகச் சிறிதளவு வாக்குகளை குறைவாக பெற்றதற்காக, அதாவது 49 வீத வாக்குகளை பெற்றதற்காக அக் கட்சிக்கு ஆகக் கூடியது 30 வீத ஆசனங்களே கிடைக்கும். இங்கு இரு கட்சிகளுக்கிடையே வாக்கு வீதம் 51 : 49 ஆகும். ஆனால் ஆசன வீதம் 70 : 30 ஆகும்.
விருப்பு வாக்கு முறை ஒழிக்கப்படுவதால் உட்கட்சி மோதல்கள் மட்டுமே தவிர்க்கப்படும். ஆனால் நீண்ட காலமாக தேர்தல்களின் போது ஒரு கட்சி உறுப்பினர்கள் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்துவது சர்வ சாதாரண விடயமாகியிருக்கிறது. இந்த வன்முறைகளை நிறுத்த அரசியல்வாதிகளுக்கு அவசியமே இல்லை போலும்.
புதிய தேர்தல் முறையை சிறிய அரசியல் கட்சிகளும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் சிறுபான்மையின அரசியல்வாதிகள் விரும்ப மாட்டார்கள். ஏனெனில் இது கால வரை சிறு கட்சிகளினதும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் சிறுபான்மையின கட்சிகளினதும்; பிரதிநிதிததுவம் விகிதாசார முறையினாலேயே ஓரளவுக்காவது உறுதி செய்யப்பட்டது. ஆனால் புதிய முறையின் கீழ் உள்ளூராட்சி சபைகளின் ஆசனங்களில் 30 வீதம் மட்டுமே விகிதாசார முறையில் நிரப்பப்படும்.
எனவே எதிர்காலத்தில் சிறிய அரசியல் கட்சிகளும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே செயற்படும் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் பெரும்பான்மையினத் தலைமையுள்ள பிரதான கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தங்கள் அதிகரிக்கும். அக் கட்சிகள் சுதந்திரமாக முடிவுகளை எடுக்கும் பலத்தை மேலும் இழந்து விடும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் செயற்படும் பிரதான தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு இந்த முறையினால் எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. ஏனெனில் அக் கட்சிகள் அம் மாகாணங்களில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தொகுதி வாரி தேர்தலில் கூடுதலான ஆசனங்களை வெற்றி பெறும். அங்கு அவற்றோடு கூட்டு சேர வேண்டிய நிர்ப்பந்தம் பிரதான கட்சிகளுக்கே ஏற்படும்.
Comments
Post a comment