ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
2019 இல் திறந்து வைப்பு
( மினுவாங்கொடை நிருபர் )
பேலியகொடையில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் மெனிங் மரக்கறி சந்தையின் பணிகள் யாவும் பூர்த்தியடைந்து வரும் நிலையில், எதிர்வரும் 2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதில் இதனை மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்க முடியும் என, நகர அபிவிருத்தி அதிகார சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பேலியகொடையில் அமைக்கப்பட்டு வரும் மரக்கறி சந்தையின் கட்டுமான வேலைகளில் 75 வீதமான பணிகள், தற்போது பூர்த்தியடைந்துள்ளன. இதற்காக, 4600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நவீன தொழில் நுட்ப முறைமையினைப் பயன்படுத்தி, இரண்டு மாடிகளைக் கொண்ட அதி விசால கட்டிடமாக இச்சந்தைத் தொகுதி அமைக்கப்பட்டு வருகிறது.
கொழும்பு நகருக்குள் ஏற்பட்டுள்ள வாகன நெறிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், மரக்கறி பாவனையாளர்களுக்கு அதி கூடிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலுமே, இந்தப் பாரிய செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, நகர அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பேலியகொடையில் அமைக்கப்பட்டு வரும் மரக்கறி சந்தையின் கட்டுமான வேலைகளில் 75 வீதமான பணிகள், தற்போது பூர்த்தியடைந்துள்ளன. இதற்காக, 4600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நவீன தொழில் நுட்ப முறைமையினைப் பயன்படுத்தி, இரண்டு மாடிகளைக் கொண்ட அதி விசால கட்டிடமாக இச்சந்தைத் தொகுதி அமைக்கப்பட்டு வருகிறது.
கொழும்பு நகருக்குள் ஏற்பட்டுள்ள வாகன நெறிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், மரக்கறி பாவனையாளர்களுக்கு அதி கூடிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலுமே, இந்தப் பாரிய செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, நகர அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Comments
Post a comment