ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
( மினுவாங்கொடை நிருபர் )
அல் - அமான் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDC), பழைய மாணவர் சங்கம் (OBA) மற்றும் கல்லொழுவை கல்வி முன்னேற்றக் கழகம் (EDF) ஆகியவற்றின் அனுசரணையில், இம்முறை மினுவாங்கொடை - கல்லொழுவை, அல் - அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்திலிருந்து க.பொ.த. (சா/த)ப் பரீட்சை எழுதி, 9 - ஏ, 8 - ஏ, 7 - ஏ சித்திகளைப் பெற்ற மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தெரிவான மாணவர்கள், பணப் பரிசில்கள் மற்றும் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இது தொடர்பிலான நிகழ்வு, அல் - அமான் முஸ்லிம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில், அதிபர் எம்.எச்.எம். காமில் தலைமையில், நேற்று முன் தினம் (14) திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.
இப்பரீட்சைக்குத் தோற்றி இம்முறை 9 - ஏ பெற்ற எம்.என்.எம். நஜாத் எனும் மாணவனுக்கு 10 ஆயிரம் ரூபா பணப்பரிசும் விருதும், 8 - ஏ பெற்ற மாணவிக்கு 5 ஆயிரம் ரூபா பணப்பரிசும் விருதும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன், 7 - ஏ சித்திகளைப் பெற்ற மற்றும் உயர்தரத்திற்குத் தெரிவான அனைத்து மாணவ மாணவிகளுக்கும் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இப்பரிசளிப்பு வைபவத்தில், மினுவாங்கொடை வலயக் கல்விப் பணிப்பாளர் (தமிழ் மொழி) எஸ்.எம். பதுருத்தீன் பிரதம அதிதியாகவும், கல்லொழுவை ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். முனாஸ் சிறப்பு அதிதியாகவும் மற்றும் அதிதிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இது தொடர்பிலான நிகழ்வு, அல் - அமான் முஸ்லிம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில், அதிபர் எம்.எச்.எம். காமில் தலைமையில், நேற்று முன் தினம் (14) திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.
இப்பரீட்சைக்குத் தோற்றி இம்முறை 9 - ஏ பெற்ற எம்.என்.எம். நஜாத் எனும் மாணவனுக்கு 10 ஆயிரம் ரூபா பணப்பரிசும் விருதும், 8 - ஏ பெற்ற மாணவிக்கு 5 ஆயிரம் ரூபா பணப்பரிசும் விருதும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன், 7 - ஏ சித்திகளைப் பெற்ற மற்றும் உயர்தரத்திற்குத் தெரிவான அனைத்து மாணவ மாணவிகளுக்கும் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இப்பரிசளிப்பு வைபவத்தில், மினுவாங்கொடை வலயக் கல்விப் பணிப்பாளர் (தமிழ் மொழி) எஸ்.எம். பதுருத்தீன் பிரதம அதிதியாகவும், கல்லொழுவை ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். முனாஸ் சிறப்பு அதிதியாகவும் மற்றும் அதிதிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
Comments
Post a comment