முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
( மினுவாங்கொடை நிருபர் )
"மாற்றத்திற்கான மடவளை" எனும் தொனிப்பொருளில், மடவளை இளைஞர் சமூக நல அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிரமதானப்பணி, கடந்த (13) ஞாயிற்றுக்கிழமை, மடவளை நகரில் இடம்பெற்றது. சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாக சுத்திகரிப்புச் செய்யப்படாமல் இருந்த, வத்தேகம கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள வடிகான்களைச் சுத்திகரிக்கும் பணியே அன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது. மடவளை இளைஞர் சமூக நல அமைப்பைச் சேர்ந்த சுமார் 70 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த சிரமதானப்பணியில் ஈடுபட்டனர். அன்றைய தினம், காலை 10 மணியளவில் ஆரம்பமான இச்சிரமதானப் பணி, இரவு 10 மணிவரை மேற்கொள்ளப்பட்டமை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments
Post a comment