වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන් කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ . නියෝජ්ය පොලිස්පති , පොලිස් මාධ්ය ප්රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර
தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளைத்தீர்ப்பதாக பாதுகாப்புச் செயலாளர், அமைச்சர் ரிஷாத்திடம் உறுதியளிப்பு!
-ஊடகப்பிரிவு-
தீப்பெட்டி உற்பத்தியில் ஏற்பட்டிருக்கும்
தடைகளை நீக்கும் வகையில், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும், தீப்பெட்டி
உற்பத்தியாளர் சங்கத்துக்கும் இடையிலான சந்திப்பின்போது, சிலமுன்னேற்றகரமானதீர்வுகள்கிடைக்கப்பெற்றதாகதாக
அந்தச் சங்கத்தின் தலைவர் பி.டி.ஆர்.ராஜனும், செயலாளர் கே.ஏ.எஸ்.ஹைதர்அலியும்தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன்அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்புகொண்டு,தீக்குச்சிகளை உற்பத்தி
செய்வதற்கான முக்கிய இரசாயனப்பொருட்களான பொட்டாசியம் குளோரைட் மற்றும் சிவப்பு
பொசுபரஸ் ஆகியவற்றின் இறக்குமதியில்,பாதுகாப்பு அமைச்சின் கெடுபிடிகளை நீக்கித்தருமாறு
விடுத்த வேண்டுகோளை சாதகமாகப் பரிசீலிப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
தெரிவித்துள்ளதாக சங்கத்தின் முக்கியஸ்தர்கள்குறிப்பிட்டனர்.
“தீப்பெட்டி தயாரிப்பில்,உற்பத்தியாளர்களான
நாம் பல்வேறு முட்டுக்கட்டைகளை எதிர்கொண்டு வருகின்றோம்.இரசாயனப்பொருட்களை இறக்குமதி
செய்வதில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளே இதற்கு பிரதானகாரணமாகும்.மூலப்பொருட்களை
இறக்குமதி செய்வதற்கான டெண்டர்களை (விலை மனு கோரல்) சமர்ப்பிக்கும் போது, அதற்கான
சாம்பிள்களையும்(மாதிரி)வழங்க வேண்டியுள்ளது.
கடந்த காலங்களைப்போலன்றிதற்போது சாம்பிள்களின்
அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால், அதனை இறக்குமதி செய்வது கடினமாக உள்ளது.
குறிப்பிட்ட இரசாயனப் பொருட்கள் எளிதில் தீப்பற்றும் திறன் கொண்டதால், விமானங்களில்கொண்டு
வருவதற்கு குறைந்தளவு அனுமதியே கிடைக்கின்றது. பின்னர்சாம்பிள்இரசாயனப்பொருட்கள்
பரிசீலனைக்காக ஐ.டி.டிபரிசோதனைக்கு அனுப்பிவைக்க வேண்டும். அங்கு பரிசோதனை
நடவடிக்கைக்காக மூன்று அல்லது நான்கு வாரங்கள் கழிகின்றது. அதன் பின்னர், பரிசீலனை
அறிக்கை பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரத்துக்காகஇரண்டு வாரங்கள் பொறுத்திருக்க
வேண்டியுள்ளது.இந்த நடைமுறைகள் முடிவடைந்து, மூலப் பொருட்களை இறக்குமதி செய்ய
சுமார் ஒருமாதகாலம் ஆகின்றது.
எமக்கு வேண்டிய மூலப்பொருட்கள் வந்து
சேர்ந்த பின்னர், மீண்டும் அவை ஐ.டி.டி பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.அந்த
அறிக்கை எமக்குக் கிடைப்பதற்கு சுமார் மூன்று மாதகாலம்எடுக்கின்றது. இந்த கால
நீடிப்பு எமது உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. அதுமட்டுமின்றிஇந்தத்
துறையில் ஈடுபட்டிருக்கும்தொழிலாளர்களும் பொருளாதாரத்தில்பெருமளவு பாதிப்பை சந்திக்கநேர்ந்துள்ளது”
என்றும் சங்கத்தின் பிரமுகர்கள், அமைச்சரிடம் தமது கவலையை வெளியிட்டனர்.
தீப்பெட்டித்தயாரிப்பில் ஈடுபடும் சுமார் 11
உற்பத்தியாளர்கள் பங்கேற்ற இந்த சந்திப்பின் போது, தமது தொழிற்சாலைகளில் பணியாற்றும்
சுமார் 8000 தொழிலாளர்களுக்கு உரிய வேதனங்கள் மற்றும் மேலதிகக் கொடுப்பனவுகள்
வழங்க முடியாது தாங்கள் திண்டாடுவதாக அமைச்சரிடம் தெரிவித்தனர்.
இவைகளைக் கேட்டறிந்துகொண்ட அமைச்சர் ரிஷாட்,
பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் தொடர்புகொண்டு இவர்களின் நிலைமைகளை எடுத்துக்கூறியதுடன்,
தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு தடையின்றி இந்தத் தொழிலை மேற்கொள்ள, அனைத்துக்
கெடுபிடிகளையும் நீக்க உதவுமாறும் வேண்டிக்கொண்டார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அமைச்சர்
ரிஷாட் பதியுதீனின் கோரிக்கையை செவிமடுத்து, இதனை சாதகமாகப் பரிசீலித்து உரிய
நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.
Comments
Post a comment