ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
50 ஆயிரம் ரூபா வரை அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு
( மினுவாங்கொடை நிருபர் )
இலங்கை வாழ் சாதாரண மக்களின் மாதாந்த வாழ்க்கைச் செலவு, 54 ஆயிரத்தி 999 ரூபா வரை எட்டியுள்ளதாக, சனத்தொகை மற்றும் குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம் மேற்கொண்டுள்ள ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இதன்பிரகாரம், நகரப் புறங்களில் வாழும் மக்களின் மாதாந்த வாழ்க்கைச் செலவு, 77 ஆயிரத்தி 337 ரூபா வரை உயர்ந்துள்ளது. இதேவேளை, கிராமிய மக்களின் மாதாந்த வாழ்க்கைச் செலவு, 51 ஆயிரத்தி 377 ரூபா வரையிலும், தோட்டப்புற மக்களின் வாழ்க்கைச் செலவு, 34 ஆயிரத்தி 851 ரூபா வரையிலும் அதிகரித்திருப்பதை, புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும், சனத்தொகை மற்றும் குடிசன மதிப்பீட்டுத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a comment