ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
முஸ்லிம் மக்களை ஏமாற்ற மற்றுமொரு முயற்சி அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
நடைபெற்று முடிந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றியீட்டி 24 மணித்தியாலங்களுக்குள், பொதுபல சேனா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பொய் பிரச்சாரம் ஒன்று சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்பட்டது, அதனைத் தொடர்ந்து முஸ்லிம் கவுன்ஸீல் ஒப் ஸ்ரீ லங்கா அமைப்பின் தலைவர் என்.எம்.அமீன் அவர்களால் உகுரஸ்பிடி, வியங்கல்லை ஆகிய இடங்களில் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்காத முஸ்லிம்கள் சிலருக்கு, பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் தொந்தரவு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட கடிதம் ஒன்றும் சமூக ஊடகங்களில் வெளியானது. அப்படி ஏதாவது தொந்தரவுகள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல். பீரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் முஸ்லிம் மக்களை எம்மிடமிருந்து தூரமாக கையாண்ட பல்வேறு வழிமுறைகள் தொடர்பில் மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். அதேபோன்று மீண்டும் முஸ்லிம் மக்களை ஏமாற்றி, எம்மிடமிருந்து தூரமாகும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜீ.எல். பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்
கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் முஸ்லிம் மக்களை எம்மிடமிருந்து தூரமாக கையாண்ட பல்வேறு வழிமுறைகள் தொடர்பில் மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். அதேபோன்று மீண்டும் முஸ்லிம் மக்களை ஏமாற்றி, எம்மிடமிருந்து தூரமாகும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜீ.எல். பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்
Comments
Post a comment