முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
“சதொச நிறுவனத்தில் ஊழியர்களை பங்காளராக்கும்திட்டத்தை
அமுல்படுத்துவோம்”
அடம்பனில் அமைச்சர் ரிஷாட் உறுதி!
-அமைச்சரின்ஊடகப்பிரிவு-
அரசாங்கத்துக் சொந்தமான சதொச நிறுவனத்தின் ஒரு பகுதியில் சதொச
ஊழியர்களையும், பங்காளராக்கி நிறுவனத்தை மேலும் முன்னேற்ற உத்தேசித்துள்ளோம்.
அரசின் அனுமதி கிடைத்தவுடன் இந்த நடவடிக்கையை நாம் மேற்கொள்வோம்என கைத்தொழில், வர்த்தக
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
மன்னார் அடம்பனில் இன்று மாலை (04) சதொச நிறுவனக் கிளை அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றும் போதே, அவர்
இவ்வாறு தெரிவித்தார்.
சதொச நிறுவனத்தை நாம் பொறுப்பேற்ற போது, 1.5 பில்லியன் மாத வருமானமே
இருந்தது. தற்போது, கடந்த வருட இறுதிக் கணக்கெடுப்பின் படி 3.5 பில்லியனாக அது அதிகரித்துள்ளது. 300 மில்லியன் நஷ்டத்தில்
இயங்கிய சதொச நிறுவனத்தை இன்று இலாபமீட்டும் நிறுவனமாக நாம் மாற்றியுள்ளோம்.
ஒரு பிரதேசத்தில் சதொச நிறுவனங்களை
ஆரம்பித்தால், அந்தப் பிரதேச வியாபாரிகள் கவலையடைவதோடு வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைவது
சகஜமானதே. எனினும்,மக்களின் நன்மை கருதியே அத்தியாவசியப் பொருட்களை சதொச
நிறுவனத்தின் ஊடாக வழங்கி வருகின்றோம்.
நாட்டில்ஏற்பட்ட வறட்சி காரணமாக அரிசியின்
விலை வெளியிடங்களில் 100 ரூபாவாக தற்போது அதிகரித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிய
முடிந்தது. தொடர்ச்சியான நாட்டின் அசாதாரண காலநிலை காரணமாக தேங்காய்
உற்பத்தியிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனினும், சதொச நிறுவனம் வெளிநாடுகளிலிருந்து
அரிசியை இறக்குமதி செய்து பாவனையாளர்களுக்குத் தட்டுப்பாடின்றி விநியோகித்து
வருகின்றது.
அந்தவகையில், நாட்டரிசி 70 ரூபாவுக்கும்,
பொன்னி அரிசி 71 ரூபாவுக்கும் தாராளமாக பெற்றுக்கொள்ள முடியும்.தேவை ஏற்படின்
தனியார் வியாபாரிகளுக்கும் நாங்கள் 24 மணி நேரத்துக்குள் அரிசியை விநியோகிக்க
முடியும்.
அரசு மாட்டுமே மேற்கொண்டு வந்த அரிசி இறக்குமதியை, தனியாரும்
இறக்குமதி செய்யும் வகையில் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். எதிர்வரும் மார்ச்
மாதம் 31ஆம் திகதி வரை இது நடைமுறையில் இருக்கும்.
நாம் இந்த நிறுவனத்தைப் பொறுப்பேற்கும் போது, நாடளாவிய ரீதியில் 300சதொச
கிளைகளே இருந்தன. நாளை கொழும்பில் பிரதமரால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவிருக்கும்
கிளையானது, நிறுவனத்தின் 400 ஆவது
கிளையாகும். அதுமட்டுமின்றிநவீன வசதிகளுடன் கூடிய கிளையாக நாங்கள் ஆரம்பித்துவைக்கவுள்ள
45 கிளைகளில் இது முதலாவது கிளையாகும்.
கடந்த காலங்களில் சதொச நிறுவனத்தில்
கையிருப்புக்கள் மேற்கொள்ளப்டுவதில்லை. தற்போது மேற்கொண்டு வரும் கையிருப்பின்
மூலம் நஷ்டத்திற்கான காரணத்தை அறிந்து, ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட
நடவடிக்கை எடுப்போம். இதிலிருந்து எவருமே தப்ப முடியாது.
ஒரு காலத்திலே சதொச நிறுவனத்தை மூட வேண்டிய
துர்பாக்கிய நிலை இருந்த போது, கடந்த இரண்டு வருடங்களில் பாரிய மற்றங்களை நாங்கள்
மேற்கொண்டுள்ளோம்.அனைத்துக் கிளைகளுக்கும் கணணி வசதிகள் செய்து
கொடுக்கப்பட்டுள்ளன. சீ.சீ.டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஊழியர்களின்
நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன. தூர சிந்தனையுடன் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலே
நாங்கள் வெற்றிகரமாக இந்தப் பயணத்தை தொடர்கின்றோம்.
நாடளாவிய ரீதியில் சுமார் 4௦௦௦ ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.
அடுத்த வருட இறுதிக்குள் 500 கிளைகளை நாங்கள் நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
இலாபமீட்டும்நோக்கத்தை விட மக்களின் விமோசனமே எங்களின் தாரக மந்திரமாகும்.
Comments
Post a comment